Sunday, June 29, 2025

படமும் கருத்தம் by Veena,Priya and Vidhya

 


வானத்தில் தவழும் மேகமும்

மீனவனின் வலையில் துள்ளும் மீன்களும்

அலையின் ஊடலில் ஒளிரும் நீரும்

பறவையின் கண்ணில் தெரியும் இரையும்  

கலைஞன் அவன் காட்சியில் புலப்படும் கரையின் அழகும்

ஓவியனின் பார்வையும்

சொல்லும் இந்த அழகு

-Veena 

இவன் அவன் வருகைக்கு

 காத்திருக்க ,அவனோ அவன்

 தொலைத்ததை தேடி அலைய,

 அழையாமல் அடிக்கும்

 அலைகளும் மோதிக்கொள்ள,

 காற்றில் மிதக்கும் மேகங்களும்,

 அதன் எதிர்திசையில் ஊஞ்சல்

 ஆடும் காகமும்.. அடங்கும் நேரம்

 எதுவோ!

- Vidhya 

மேகத்துக்கு தங்க முலாம் பூசி 

சூரியனை சற்று நிறுத்தி வைத்தது போல 

என் உள்ளுணர்வு 

காக்கையும் என்னிடம் வந்து 

திருஷ்டிக்கு மை எடுத்துக்கொள் 

என்று கூறியது போல நினைத்துக் கொண்டிருக்கையில்

அக்கறை சீமையிலிருந்து 

அழைப்பு மணி ஒலித்துக் கொண்டிருந்தது 

எடுத்து கதைத்த போது 

 “தேவதை பிறந்திருக்கிறாள்” 

என்ற செய்தி 


--பிரியா


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...