வானத்தில் தவழும் மேகமும்
மீனவனின் வலையில் துள்ளும் மீன்களும்
அலையின் ஊடலில் ஒளிரும் நீரும்
பறவையின் கண்ணில் தெரியும் இரையும்
கலைஞன் அவன் காட்சியில் புலப்படும் கரையின் அழகும்
ஓவியனின் பார்வையும்
சொல்லும் இந்த அழகு
-Veena
இவன் அவன் வருகைக்கு
காத்திருக்க ,அவனோ அவன்
தொலைத்ததை தேடி அலைய,
அழையாமல் அடிக்கும்
அலைகளும் மோதிக்கொள்ள,
காற்றில் மிதக்கும் மேகங்களும்,
அதன் எதிர்திசையில் ஊஞ்சல்
ஆடும் காகமும்.. அடங்கும் நேரம்
எதுவோ!
- Vidhya
மேகத்துக்கு தங்க முலாம் பூசி
சூரியனை சற்று நிறுத்தி வைத்தது போல
என் உள்ளுணர்வு
காக்கையும் என்னிடம் வந்து
திருஷ்டிக்கு மை எடுத்துக்கொள்
என்று கூறியது போல நினைத்துக் கொண்டிருக்கையில்
அக்கறை சீமையிலிருந்து
அழைப்பு மணி ஒலித்துக் கொண்டிருந்தது
எடுத்து கதைத்த போது
“தேவதை பிறந்திருக்கிறாள்”
என்ற செய்தி
--பிரியா

No comments:
Post a Comment