யாருக்காக யார் நிகர் இங்கே?
இயற்கையின் படைப்பில் மலரை நுகர வந்த பூச்சியா?
பூச்சியை நுகர விடாமல்
தடுத்து மொட்டுக்களை மலர விடாமல் செய்யும் இயற்கையா?
காலத்தின் மாற்றத்தால் செடியிலேயே வெம்பி விடும் மலரா?
மலரின் செயலால் ஏமாற்றம் அடைந்த வண்ணதத்துப் பூச்சியா?
பிறருக்கு புத்துணர்ச்சியை ஊட்ட துடிக்கும் மொட்டுக்களின் அழகா?
எது குளிர்ச்சி இங்கே?
எது நிரந்தரம் இங்கே?
அழகின் சிரிப்பில் எதுவும் சிறப்பே!
- Veena
எதை ரசிக்க ?
பல வண்ணத்தை பூசிய
வண்ணத்துப்பூச்சியையா?
பல வண்ணத்தை சுமக்கும்
செடியையா?
சொக்கும் அழகில் பூத்து நிற்கும்
அவளை நுகர சென்ற அழகன்,
சொக்கி போய் போன வேலை
மறந்து செடிக்கு தண்ணீர்
ஊற்றினான்!
பூவின் காதலன், காவலன்
ஆனான்...வேலி போடாத வரை
சரி!
- வித்யா
பட்டாம்பூச்சி
----------------
சிறை உடைத்தால்
சிறகடிப்பாய் என்ற தத்துவத்தை
உணர்த்தியது நீ
எங்கே பட்டை தீட்டினாய்
உன் இறகுகளை
யார் குத்திய பச்சை உன் மேனியெங்கும்
மழையிலும் கரையாத வண்ணம்
உன் நான்கில் இரண்டை எனக்கு தருவாயா
நானும் வானவில் உரசிட
உன் போல் எனக்கும் இரண்டுவேண்டும்
ஒன்றாவது என் தாய்க்கு
இரண்டாவது என் தாட்டிக்கு
உன் அதிர்வெண்களுக்கு
ஆரோகணம் அவரோகணம்
நான் எழுதவேண்டும்
என்னையும் சுமந்து செல்
பறந்ததில்லை வானவூர்தியில்
நானும் சோதிக்க நயம் தேனை
என் மடல் அருகில் ரீங்காரம் ஒலிப்பாயா ?
சற்று ஓய்வெடுக்க !!!
---- பிரியா

No comments:
Post a Comment