முகமூடி என்ற உடனே ஞாபகம் வந்தது சிறு வயதில் பார்த்த முகமூடி திரைப்படம் தான்.முகமூடி என்ற தலைப்பிற்கு என்ன எழுதுவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். என்னை சிந்திக்க தூண்டிய அனைத்து தோழிகளுக்கும் நன்றி .
முகமூடிகள் பாதுகாப்புக்காக ,கலாச்சாரத்திற்காக, பண்பாட்டிற்காக ,மகிழ்ச்சிக்காக ,அழகிற்காக என பல வடிவங்களில் வழக்கத்தில் இருந்திருக்கிறது.
ஆனால் இன்று ஏராளமான வடிவமில்லாத முகமூடிகள் பழக்கத்தில் உள்ளது முதலில் இந்த முகமூடியை கழட்டி எறிந்து விட்டாலே மற்ற முகமூடிகள் தேவையே இல்லை.
பயம் என்னும் மாய முகமூடி
அகந்தை என்னும் மமதை முகமூடி
தாபம் என்னும் கோப முகமூடி
புத்திசாலி என்னும் கோமாளி முகமூடி
பொதுநலம் என்னும் சுயநல முகமூடி
என எண்ணிலடங்கா.. நொடிக்கு நொடி ஆளுக்கு ஆள் ஏற்றார் போல் மாறிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவுதான் பூசி மொழுகி அழகான மூடிகளை புற முகத்திற்கு போட்டாலும் அகமாகிய மனமென்னும் முகத்திற்கு எந்த மூடியை போட்டு மூடமுடியும்.
எந்த முகமூடிகளும் 😷 இல்லாமல் இப்பூவுலகில் எங்கும் சென்று சுதந்திரமாக சுவாசிக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏





👌ஆழமான பதிவு வித்யா 👌
ReplyDeleteNice one
ReplyDeleteThank you 😊
Deleteமிக அருமை.. வார்த்தைகளின் கோர்வை .. யதார்த்தத்தை பிரதிபலித்தது👍
ReplyDeleteமிக்க நன்றி 🙏
ReplyDeleteSuper,proud my child
ReplyDeleteThank you Amma 😍
ReplyDelete