வைரமுத்து அவர்களின் "கருவாச்சி காவியம்" படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிராமத்து நாவல்களைப் படிக்கும் பொழுது நம்மை அறியாமலேயே கண்கள் கலங்கிவிடும் . இந்த புத்தகம் ஒரு பெண் பிறந்தது முதல் சாகும் வரை பூ போல இருப்பவள் ,எப்படி புயலாகவும் மாறுவாள் ,பிறகு பாறையாகவும் மாறுவாள், எல்லோரும் கை கூப்பும் தெய்வமாகவும் என்று அழகாக அவருக்கு உரிய கிராமத்து மொழியில் பேசியிருப்பார் வைரமுத்து.
எத்தனை போராட்டங்கள் வந்தாலும் பெண்ணொரு மலைபோல வருவோருக்கும் ,போவோருக்கு மொரு இருப்பிடமாக, வந்து தங்கும் அனைவரும் பயனடைந்து செல்கின்றனர். இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும் பொழுது நமக்கே பெண்மை மீது ஒரு அன்பும் ,எவ்வளவு மென்மையானது நம் உடல் ,என்று பெண்மை மீது நமக்கு ஏற்படும் காதல் ,குறிப்பாக கிராமத்து உணவின் மணமும்,கைவைத்தியமும்,தாய் -மகள் அரவணைப்பின் சுகம்,பிள்ளை போல் வளர்த்த உதவியாளர், ஆடு,வீடு என அழகாக பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.கடைசில் ஒரு ஞானியே வந்து ஒரு பெண்ணிடம் ஞானம் கேட்பதுபோல முடித்து இருப்பார் ஆசிரியர்.
கிராமத்தில் வாழும் ஒரு சாதாரண பெண் கூட ஞானம் படைத்தவளே அவள் கூறி செல்லும் சாதாரண வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கும் என்று சொல்லாமல் சொல்லி இருப்பார் வைரமுத்து அவர்கள். இதற்கென உண்ணாநோன்பிருந்து தவம் புரிய வேண்டிய அவசியமில்லை அவளுடைய அன்றாட வாழ்க்கையே போதும், ஒரு தவம்.

No comments:
Post a Comment