Tuesday, April 27, 2021

சிந்தனைக்குரிய பகுதி -" புத்தகம்" by Veena Shankar

 


புத்தகம்


எழுத்துக்களின் கோர்வை சொல்

சொற்களின் கோர்வை வாக்கியம்

வாக்கியங்களின் கோர்வை பக்கம்

பக்கங்களின் கோர்வை புத்தகம்

புத்தகங்களின் கோர்வை புத்தக நிலையம்


எழுத்துக்களால் பக்கத்தை  நிரம்பவிட்டாய்  நீ

என் இருளையும் போக்கிவிட்டாய்


பல புலவர்களால் உருமாறினாய் நீ

பல நல்ல செய்யுளை ஏந்தி வந்தாய்


பல கவிஞர்களால் பாடப்பட்டாய் நீ

பல இசையால் எங்களை ஈர்த்தாய்


இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப்பட்டாய்  நீ

பழைய புத்தகக் கடையில் உன்னை நான் வாங்கும் போது 


உன்னையன்றி உலகமில்லை

கணினி உனக்கு நிகரில்லை


இடத்திற்கு தகுந்தாற் போல் உன் உருவத்தை 

மாற்றிகொண்டாய் நூல் நிலையமாய்


உன்னால் அறிவை வளர்த்தேன்

உன்னை நான் ஸ்பரிசித்ததால்

வகுப்பறையில் மாணவர்களை பிரிப்பதுபோல் உன்னை பாடவாரியாக  பிரித்தோம்

பிரித்தாலும் சேவையாற்றுகிறாய்

அடுக்குத்தொடர் போல


மொழி பேதம் கிடையாது உனக்கு

பல எழுத்தாளர்களை நீ உருவாக்கியதால்


அறிவை பெருக்குகிறாய் படிப்பதால்

ஆற்றலை கொடுக்கிறாய் பின்பற்றுவதால்

இரவலாய் மாறுகிறாய் ஆசையிருப்பதால்

(புத்தகமானாய்) ஈன்ற தாயான ஓலைச் 

             சுவடிகளின்  மாற்றத்தைப் பெற்றதால் 

உற்றாருக்கு பரிசாகிறாய் நீ தூண்டுவதால்

ஊருக்கு ஒன்றாய் பிறக்கிறாய் குடும்பமாய்

எதிர்ப்பார்ப்பாய் இருக்கிறாய் எங்களுக்கு  

                                           மலராய் மலர்வதால்

ஏந்த காத்திருக்கிறோம் உன்னை 

ஐயத்தையும் போக்குவதால்

ஒளிவு இல்லை உன்னிடம் ஒளியைத் தவிர

ஓரமாய் நீ இருந்தாலும் உன்னை

                                            தீண்டுவோர் உண்டு

ஔடதமே நீ எங்களுக்கு எங்களின்

                                             மனதை ஆற்றுவதால்

அஃதே எனக்கு தெரிந்த மொழியாம்

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...