Monday, April 26, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"புத்தகம்" by Jayanthi

 


       ஆயிரம் ஆயிரம் வருடங்கள்

முன் வாழ்ந்த எம் முன்னோர்களை

எம் மூத்த குடிகளை

உணர்ந்தேன் மகிழ்ந்தேன்

என் கையில்

ஏய் புத்தகமே...

அன்றும் இருந்தன படைகள்( போர் )

இன்றும் உள்ளன

ஆனால்

அன்றோ இயற்கையின் ஆதிக்கம் இன்றோ எல்லாம் செயற்கை

சுவாசிக்க காற்று செயற்கையாக கூட கிடைக்கவில்லை...

இதையும் வரலாறாக

உன்னுள் எழுதுவர்

ஏய் புத்தகமே

இனிமேலும் எம் சந்ததியினர்

ருசிக்க, ரசிக்க மட்டுமே உன்னை

ஏந்த வேண்டும் கையில்...

தேடு

அதுபோன்ற எழுத்தாளனையும் தித்திக்கும் உலகையும்

போதும்,

கபசுரக் குடிநீரும், நிலவேம்பும்

கசக்கிறது.

பொன்னியின் செல்வனையும்,வேல் பாரியையும் போர்கள் இல்லாமல் சுவைக்க கையில் ஏந்த காத்திருக்கிறது

இந்த உலகம்

ஏய் புத்தகமே, என் புத்தகமே...

            - ஜெயந்தி


1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...