அன்புள்ள வானவில்லிற்கு உன் தோழி எழுதும் கடிதம்
பெண்மையின் ஏழு பருவங்களை உன் வண்ணங்களாய் கொண்டனையோ
மழை சாரலையும் வெயிலையும் உன்னுள் கொண்டு வெளிப்பட்டனையோ
வானத்தை வளைக்க எண்ணி முடியாமல் வளைந்து நின்றனையோ
நீ தனியாக வர பயப்பட்டு கூடவே இன்னொரு நிழலையும் அழைத்து வந்தனையோ
என் முன் இரட்டை வானவில்லாய் உருவெடுத்தனையோ
வானவில்லுக்கு வானமே ஆயுதம்
மனித வில்லாய் இருப்பதைக்காட்டிலும் வானத்து வில்லாய் மாற ஆர்வம் கொண்டனையோ
எது எப்படியோ உன்னை வரையாத ஓவியனுமில்லை
உன்னை பாடாத கவிஞனுமில்லை
மனிதனின் மனதிலிருந்து அழியக்கூடியவனுமில்லை நீ.
இப்படிக்கு உன்னை எதிர்பார்க்கும் தோழி நான்.

அழகான கடிதம்❤
ReplyDeleteநன்றி
Delete