பரிசாக கிடைத்த அக்னி சிறகுகள்,கள்ளிக்காட்டு இதிகாசம் பிறகு படிக்கக் கிடைத்த முதல் புத்தகம் "பொன்னியின் செல்வன் "முதல் பாகம். அதை அடுத்து கிடைத்த புத்தகமே "பார்த்திபன் கனவு" .உண்மையிலேயே கல்கியின் எழுத்து பல புராண புத்தகங்கள் படிக்க தூண்டிய கனவை காண செய்தது. தந்தையின் கனவை சுமந்து செல்லும் மகன், அவருக்கு துணையாக வரும் படகோட்டியும் அவரது மனைவியும், அவள் சுடும் கம்பு அடையும் மறக்க முடியாது.பல்லவர்களின் சிற்பக்கலை ஆர்வமும் ,மகாபலிபுரம் உருவான கதையும், சமண ,சைவ மதங்களைப் பற்றிய புரிதலும், அதுவரை கண்டிராத இனிமையான கனவின் அனுபவத்தை தந்தது பார்த்திபன் கனவு.
அதன் தொடர்ச்சியே கல்கியின் அனைத்து புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து முடிக்க முடிந்தது .அதற்கான தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த புத்தகத்தையே சாரும். அதன் தொடர்ச்சியாக " சிவகாமி சபதம் " நாவல் படித்தேன் .பல்லவர்கள் ,சாளுக்கியர் பற்றிய வரலாற்றையும் ,சமண ,சைவ மதத்தைப் பற்றியும் மிகத் தெளிவாக கூறியிருப்பார் ஆசிரியர் . எல்லோரா சிற்பக் கலையையும், சித்தன்னவாசலையும் உடனே பார்க்கத் தூண்டும் கல்கியின் எழுத்து. அத்தனை அருமையான கலை நயத்தை தூண்டும் நாவல்கள்.
கல்கியின் அனைத்து புராண நாவல்களும் கீழே வைக்க முடியாது அதை தொடர்ந்து பொன்னியின் செல்வனின் அனைத்து பாகங்களையும் வலைத்தளத்திலே படித்து முடித்தேன் . எப்படி படித்தேன் என்றே தெரியாது அத்தனை ஆர்வத்தை தூண்டியது கல்கி அவர்களின் எழுத்து.கல்கியின் "தியாக பூமி "என்னும் நாவல் இன்று பல சினிமாக்கள் கதைப் போல இருந்தாலும் அன்றே எப்படி இப்படி ஒரு பெண்ணின் வாழ்வை சித்தரித்திருப்பார் ஆசிரியர் என தோன்றும். கல்கி அவர்களின் சோழ புராணக் கதைகள் சேர ,பாண்டிய கதைகளையும் படிக்க தூண்டியது.

No comments:
Post a Comment