அழகு எது?
அறிவு எது?
இரண்டும் ஒரு சேர
பார்வையும் அழகே!
புத்தகத்தின் மதிப்பு
அதில் அடங்கியுள்ள
பொக்கிஷத்திலே!
அதற்கு சிறப்பு கூட்ட
படித்தவர் நடப்பதிலே!
காணும் போது ஆனந்தம் மனதில்
அலைபேசியின் இடத்தை
புத்தகம் ஆக்கிரமித்தது
படிப்பதாய் நடிப்பது கூட உண்டு
மாணவ பருவத்திலே
இருப்பினும்
நடிப்பு கைகொடுக்காது இங்கே
பாடம் விளங்கி அவன் உயர
படிப்பு என்பதும் வாசிப்பு மட்டுமல்ல
வாசிப்பதை மனதில்
அடைக்கலம் தருவதே படிப்பு
- Veena
புத்தகமும் நானும்
புரியாத புதிராக எப்போது எப்படி
இருப்போம் என்று எங்களுக்கே
தெரியாது..படிப்பவருக்கு ஒரு
உரு படைத்தவருக்கு ஒரு உரு
மொத்தத்தில் மாற்றான்,ஆனால்
வேற்றான் .
- Vidhya

No comments:
Post a Comment