Wednesday, October 22, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அழகு எது?

அறிவு எது?

இரண்டும் ஒரு சேர

பார்வையும் அழகே!

புத்தகத்தின் மதிப்பு

அதில் அடங்கியுள்ள

பொக்கிஷத்திலே!

அதற்கு சிறப்பு கூட்ட 

படித்தவர் நடப்பதிலே!


 காணும் போது ஆனந்தம் மனதில்

அலைபேசியின் இடத்தை

புத்தகம் ஆக்கிரமித்தது


 படிப்பதாய் நடிப்பது கூட உண்டு

மாணவ பருவத்திலே

இருப்பினும்

நடிப்பு கைகொடுக்காது இங்கே

பாடம் விளங்கி அவன் உயர

படிப்பு என்பதும் வாசிப்பு மட்டுமல்ல

வாசிப்பதை மனதில்

அடைக்கலம் தருவதே படிப்பு

- Veena 

புத்தகமும் நானும்

புரியாத புதிராக எப்போது எப்படி

 இருப்போம் என்று எங்களுக்கே

 தெரியாது..படிப்பவருக்கு ஒரு

 உரு படைத்தவருக்கு ஒரு உரு

 மொத்தத்தில் மாற்றான்,ஆனால்

 வேற்றான் .

- Vidhya 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...