Thursday, October 9, 2025

இன்றைய மினி கதை by Veena Shankar

 


இன்றைய மினி கதை 


பெரிய நகரம் என்றாலும் சந்து பொந்துகளும் அங்கே உள்ளடக்கம். அப்படிப்பட்ட அந்த தெருவில் இருப்பதே பதினைந்து வீடுகள் தான். ஆனால் அங்கே தண்ணீர் பிடிக்கும் போது எங்கிருந்து தான் சண்டை ஆரம்பிக்குமோ என்று தெரியாது. யாராவது இருவருக்கு சண்டை முற்றிப் போய்விடும். பின் சுரத்து இறங்க, . எந்த சண்டையும் நடக்காதது போலே நிலைமை சகஜமாகி

 அமைதியாகிவிடும். இது தான் அந்த தெருவின் வழக்கம்.


 அன்றும் அப்படி தான் இருவர் சண்டை மூன்று நான்கு என அணி சேர கூச்சல் மட்டுமே விண்ணை பிளந்தது. இது காணாது என்று நாய்கள் கூட்டம் வேறு. ஏரியா பிரச்சனைக்காக கூச்சல் போட, ஆஹா! தெருவே இந்தியா பாகிஸ்தான் மேட்ச் போல தெரிந்தது. " ச்சு! போங்க" . என ஒருவர் குரல் கொடுக்க, முதலில் நிசப்தமானது நாய்கள் கூட்டம் தான். தாமதமாக உணர்ந்தது மனிதக் கூட்டம். குரல் வந்த வழியே எல்லோரும் பார்க்க ஊரின் பிராதன ரௌடி ஒருவன் ஊர் நாட்டாண்மையாக மாறி இருந்தான். 


தேவைக்காக தேவையில்லாமல் சண்டை போடும் நிலை மாற வேண்டும்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...