இன்றைய மினி கதை
" சில்லறை இருக்குள்ள, அதை கொடுக்காம முழு ஐநூறு ரூபாய் தாளை கொடுத்திருறீங்களே?" என்று சுமி கத்திக் கொண்டிருக்க , "யாருக்கும் இனாமாகவா கொடுத்தேன்? கோயிலுக்கு கேட்டாங்க அவரத்துலே எங்கிட்ட பணம் இல்ல . அது தான் உன் பர்சிலிருந்து எடுத்து கொடுத்தேன்" என ரவி சொல்லவும், "ஆமா ! பெருசா நன்கொடை கொடுத்திட்டாரு. அதை பாப்பா பர்சிலிருந்து சில்லறை எடுத்து கொடுத்தா என்னவாம். நான் கணக்கு போட்டு ஒவ்வொருத்தருக்கும் தனியா எடுத்து வைத்திருப்பேன், அதுவும் ஐநூறு ரூபாய் தாளாய்" என ஆவேசமாக கத்தினாள் சுமி.
இது நடந்தது முன் தினம் இரவு. அடுத்த நாள் காலையில் ஐநூறு ரூபாய் தாள் செல்லாது என அரசு அறிவித்துள்ளதாக செய்தி வர, ரவியை ஓரக்கண்ணால் பார்த்து தலை கவிழ்ந்தாள் சுமி. "ஒரு ஐநூறு ரூபாய் தாளை மாற்றுவதை உனக்கு மிச்சம் பண்ணிவிட்டேன் என ரவி யதார்த்தமாய் சொன்னான்.
தான் செய்வது தவறல்ல, அடுத்தவர் தவறை உன்னிப்பாக கவனிக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

No comments:
Post a Comment