இரைக்கான வழியை
இறை காட்டும் போது
பசியும் மறந்து
வயிறு நிரம்பும்
எதிலும் ஏற்றம் காண பிறரை புறந்தள்ளி ஏறி நிற்க தான் வேண்டும்
மிதிபடுவது ஏணியாய் இருக்க
வேண்டியது இல்லை
எதுவும். ஆகுமே!
வல்லவனுக்கு புல்லும் ஆயுதமே!
ஊருக்கு பெரியவன் யார்?
தன் வலியை மறந்து
அடுத்தவரின் பசிக்கு
உறுதுணையாய் இருப்பவனே
- Veena
ஒன்றை ஒன்று சார்ந்த
வாழ்க்கை பயணம்
இதில் குனிந்தவர் எல்லாம்
கோழையும் இல்லை,
மேலே நிற்பவரும் பலசாலி
இல்லை,
ஒன்றன் துணை மற்றொன்று
வளர உதவினால் போதும்,
தொந்தரவாக மாறினால்,
மனஅமைதியை கெடுத்தால்
விலகி நில்.
- Vidhya

No comments:
Post a Comment