புல்லாங்குழலூதும் கண்ணனோ?
அவன் என்றும் மாயவனோ?
ஆயர் பெண்களின் காதலனோ?
எவரையும் மயக்கும் மாதவனோ?
பசுக்களை மேய்த்தவனோ?
உள்ளம் கவர் கள்வனோ?
தாய்க்கு விளையாட்டுப் பிள்ளையோ?
வெண்ணெயை திருடி உண்டவனோ?
பாடம் புகட்டும் ஆசிரியனோ?
தோழிக்கும் சிறப்பான தோழனோ?
உற்றவனோ?
யார் அவன்?
என்னில் எண்ணம் உதிக்க அவனை
காண வேண்டி
திக்கு தெரியாத காட்டில்
தொலைத்தேனோ?
அதுவும் அவனாலே
மீள்வேன் என்பதும் உறுதியே!

No comments:
Post a Comment