'தம்மபதம்' என்பதற்கு பல பொருள் உண்டு. நீதி,விதிமுறை,நன்மை,உண்மை,கட்டுப்பாடு ,அறத்தின் வழியான பாதை .
எண்ணங்களின் பிறப்பிடம் மனம்,தூய்மையற்றது.
மனமற்ற நிலையே தூய்மை, உண்மை.
மனத்தின் தேடுதலே பொய்கள், அவற்றை தேடி திரிகிறோம்,பழையவை மறைய புதிதாக அவை பல கண்டுபிடிக்கப்படுகிறது.உண்மையை அறிய, ஏற்க மறுக்க.
உண்மையை கண்டுபிடிக்க முடியாது ,அது நிரந்தரமானது, அதை நாம் புறக்கணிக்க பொய்யை தேடுகிறோம்.
அதை ஏற்கும் நாளில் மனமற்ற,விழிப்புணர்பு பிறக்கும்.
மனம் பற்றி ,
முதல் உலகம் புறவுலகு விஞ்ஞானிகள் தேடுவது,இரண்டாவது மனவுலகம் ,மூன்றாவது அகவுலம்,உள்ளிருப்பு சுயம்.
வெறுப்பை வெறுப்பால் அழிக்க முடியாது, வெறுப்பு இறந்த ,எதிர்காலத்தின் பிள்ளை அதன் அடித்தளம் அன்பு,அது உண்மையானது அல்ல.அந்த அன்பிற்கு பிண்ணனி உண்டு அது வெறுப்பாக மாறும் ஒருநாள்.
உண்மையான அன்பு வெட்ட வெளியில் காரணமின்றி வரும் மகிழ்ச்சி,தூரத்தில் ஒலிக்கும் குயிலின் குரல் காதில் இனிப்பது போல்,அது தொடர்பற்றது.
மனத்தின் இருள் துன்பம் அதை மாற்ற முடியாது,அதன் அருகில் ஒளியை கொண்டு சென்று இன்பத்தை பெற முடியும்.
மனம் மறைய,ஆணவம் போக, விழிப்புணர்வு பிறக்க மௌனமும், சிந்தனையும் வழி நிற்க, ஒளியை அருகில் நிறுத்த தியானம் துணை புரியும்.
வாழ்வில் பிறப்பும், இறப்பும் நிரந்தரமானது.
தியானத்தின் மூலம் மனமற்ற நிலையை அடைய, இறப்பை அறிவதை உணர்த்தியது புத்தரின் தம்மபதம்.
இறப்பை நோக்கி போவது எதிர்காலத்தை பற்றிய பயம்.
தியானத்தின் வழி வாழ் என்றது ஓசோவின் தம்மபதம்.
வாழ்வு நோக்கி போவது நிகழ்காலம்,எந்த நேரத்திலும் உணரக்கூடியது.
வாழ்வு நோக்கிய உணர்வு விழிப்புணர்வை உண்டாக்கிவிடும்.
தொடரும்..

No comments:
Post a Comment