இசைக்கு அடுத்து என்னை அசையாமல் ஆசையாக இசைக்க வைத்த என் அருமை புத்தகமே,
இருந்த இடத்திலிருந்து என்னை முக்காலங்கள்,பல இடங்கள் இயக்கிய என் அருமை புத்தகமே...
அடங்காமல் அலைகிறது நீ கொடுத்த நினைவலைகள்,தவிக்காமல் தாகம் தொடர்கிறது😊
அகண்ட ஆகாயத்தில்
இளவேனிற்கால ஈரக்காற்றில்
உல்லாசமாக ஊ லா லா பாட சில நேரம்...
ஐக்கியமாய் அமர்ந்து
எல்லையற்ற ஏகபோகத்தில்
ஒட்டாமல் ஓடும் ஒளகம் நாசியில் ஏறுமுகமாக ஏறியது போல் சில நேரம்..
தேனில் நனைத்த பலாப்பழ சுளைபோல சில நேரம்..
பூவின் ஒவ்வொரு இதழாக பிய்பது போல சில நேரம்..
முள்ளில் நடப்பது போல சில நேரம்..
புதருக்குள் இருக்கும் பூதம் கிளம்பிய கதையாக சில நேரம்..
பூக்கள் வெடிக்க வருகின்றன தேன் துளி போல் சில நேரம்..
பல உணர்வை தந்த புத்தகமே...
உனக்கு நான் அடிமையா?
எனக்கு நீ அடிமையா தெரியவில்லை?
உன்னை தீண்டியவரும்
தொடர்ந்து தீண்டாவதவருமில்லை?
தீண்ட தீண்ட மீண்டும் தொடரும் பீனிக்ஸ் பறவை நீ,
பருக பருக நிறுத்த முடியாத அமுதம் நீ
விடியா வானில் விடியும் வெள்ளியே!!!
தேட தேட முடியா தேடலே
போக போக நீளும் வானமே
சிறகுகள் இல்லாமல் சிறகடிக்கும் புத்தகமே..
ஒரே ஒரு புத்தகம் போதும் பல விடியலை மாற்றுமே..
பல வழிகளை காட்டுமே!
என்னையும் வெளி தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள்..
கையளவு இருந்தாலும் கடலளவு ஆழமானவன் நான்...📚
உதடுகள் மலராமல்
உன்னை ஏந்தும்
உள்ளங்கள் மலர
சிரிக்க சிந்திக்க
அழுக பயப்பட
பாட ஆட
பறக்க மிதக்க
உன்னை ரசிக்கும்
மகனை என்னை
ரசிக்க செய்தாய்📚
உயிரற்ற நீ
உன்னை உணரும் நொடில்
உயிர்ப்பிக்கிறாய் உன்னை படைத்தவனையும்...
தீரா "வேட்கை "
புத்தகமே!!!


அருமையான அழகான ஆழமான இதமான ஈரக்கும் வரிகள்
ReplyDeleteமிக்க நன்றி வீணா
DeleteSuper,kavithai,
ReplyDeleteThank you Amma
DeleteAll,the best
ReplyDeleteThank you
Deleteஅருமை🥰🤩🤩
ReplyDeleteThank you Kalai 😊
ReplyDelete