Thursday, October 21, 2021

இந்த வாரத்தலைப்பு "இயற்கை" by Veena Shankar

 


கள்ளம் கபடமற்ற மழலையின் புன்னகையும் 

நெற்றி வேர்வை சிந்தும் விவசாயியின் உழைப்பும்

இயற்கையின் கொடையே

இயற்கை

பூமியில் கொட்டிக்கிடக்கும் வளங்களும்

மனிதன் வெட்டி சாய்க்கும் மரங்களும்

காலையில் எட்டிப் பார்க்கும் சூரியனும்

இரவில் ஆட்டிவிக்கும் குளிரும்

வடிவம் கெட்டியாய் இருக்கும் பாறைகளும்

மலையிலிருந்து ஆர்ப்பரித்து விழும் நீர்வீழ்ச்சியும்

மனிதனுக்கு சவால் விடும் காட்டுத்தீயும்

வற்றாத நதியும்

வறுத்தெடுக்கும் கோடையும் 

உருகியோடும் எரிமலையும் உறவாடும் பனிபாறையும்

ஆழ்கடல் உயிரினங்களும் ஆளும் தங்க சுரங்கங்களும்

மணம் கமழும் மலர்களும்

மனம் மாறா குணமும்

பார்வையின் பசுமையும்

பாவையின் கருங்கூந்தலும்

மனிதனை இயக்கும் இதயமும்

இதயத்தை மாற்றும் மருத்துவரும் 

இயற்கையே , நாம் அடைந்த கொடையே

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...