கள்ளம் கபடமற்ற மழலையின் புன்னகையும்
நெற்றி வேர்வை சிந்தும் விவசாயியின் உழைப்பும்
இயற்கையின் கொடையே
இயற்கை
பூமியில் கொட்டிக்கிடக்கும் வளங்களும்
மனிதன் வெட்டி சாய்க்கும் மரங்களும்
காலையில் எட்டிப் பார்க்கும் சூரியனும்
இரவில் ஆட்டிவிக்கும் குளிரும்
வடிவம் கெட்டியாய் இருக்கும் பாறைகளும்
மலையிலிருந்து ஆர்ப்பரித்து விழும் நீர்வீழ்ச்சியும்
மனிதனுக்கு சவால் விடும் காட்டுத்தீயும்
வற்றாத நதியும்
வறுத்தெடுக்கும் கோடையும்
உருகியோடும் எரிமலையும் உறவாடும் பனிபாறையும்
ஆழ்கடல் உயிரினங்களும் ஆளும் தங்க சுரங்கங்களும்
மணம் கமழும் மலர்களும்
மனம் மாறா குணமும்
பார்வையின் பசுமையும்
பாவையின் கருங்கூந்தலும்
மனிதனை இயக்கும் இதயமும்
இதயத்தை மாற்றும் மருத்துவரும்
இயற்கையே , நாம் அடைந்த கொடையே
No comments:
Post a Comment