Friday, October 22, 2021

ஒன்றில் நான்கு கவிதைகள் by Veena Shankar

 


தாய் பாசம்


கருவில் சுமந்த உன்னை 

தெருவில் அலைய வைத்தேன் 

செருப்பு இல்லாமல் நடந்த உன் கால்களை 

நெருப்பின் மேல் நடக்க வைத்தேன் - என்னை

சீராட்டி வளர்த்த உனக்கு 

சீமாட்டியாய் வாய்த்தாள் என் மனைவி

எதிர்த்துப் பேச முடியாமல் நான் இருக்க 

மதித்து பேச தெரியாதவள் அவள் இருக்க 

மிதித்து விடும் அவள் பார்வையால்

கொதித்துப் போனேன் ஒருநாள் 

அதனால் நானும் திரும்பி விட்டேன்; 

தங்கிவிட்டேன் உன்னோடு இந்திய தெருவில்



 உண்மை நிலை


பக்தி அதிகமாகியது உண்மை குறைந்ததால்

உண்டியல் நிறைந்தது பாவமன்னிப்பு என்று கருதுவதால் 

உலகம் சுருங்கியது அலைபேசியின் வரவால் 

தண்டனையும் ரத்தானது சட்டத்தின் ஓட்டையால் 

தெய்வம் கலங்குகியது கோயிலில் இடப் பற்றாக்குறையால் உண்மை அழுதது பொய்யான சிரிப்பால்

காதல் கசந்தது பிரிவு  சாதாரணமானதால் 

ஆரோக்கியம் குறைந்தது அவசரகால அறுவடையால் 

பெண்களின் ஆடையும் குறைந்தது நாகரீகம் 

வளர்ச்சி அடைந்ததால் 




 இலவசம் 


இலவசமாக மிதிவண்டி கிடைத்தும் 

பயனில்லை மாணவனுக்கு பயன்பட்டது 

அவன் தந்தைக்கு டாஸ்மார்க் செலவிற்காக




 தகவல் பலகை 


தகவல் பலகை ஆனது என் மனம் 

பல   காதல்களை சேர்த்து வைத்ததால்

ஆனால் என்னவோ என் பெயர் மட்டும் 

அழிக்கப்பட்டது கல்லூரியின் பதிவேட்டிலிருந்தும்

தேர்வு முடிவின் பலகையில் இருந்தும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...