அழகிற்கே அழகு சேர்க்கும் அழகு தாயுக்கு மகளின் அழகு..
உழவனுக்கு நெல்லின் அழகு உழைப்பின் அழகு..
கண்ணுக்கு தெரியாத அழகு பசித்தவனுக்கு உணவிட்டு (செவிக்கும்/ வயிற்றுக்கும் )ரசிக்கும் அழகு...
அழகு எது அழகு
கொலுவில் அமர்ந்திருக்கும் பொம்மைகளா??
அம்மா போட்டுவிட்ட பாவடையும் பூவும் கலையாமல் பொம்மை போல..
உள்ளிருந்து சாப்பிட என்ன தருவார்கள் என எட்டிப்பார்க்கும் குழந்தைகள் அழகா??
அழகு எது??
கண்ணில் காண்பவை யாவும் அழகு
அழகு என்ற மூன்றெழுத்து பேரழகு..
நேற்று பார்த்த புதுமையான சரஸ்வதி தின வாழ்த்து,ஏன் கடவுள் எல்லாம் வெண்ணிறமாக தான் இருக்க வேண்டுமா???
நிறத்தில் எல்லா நிறமும் அழகே,கருமை அனைத்திலும் தெளிந்த அழகு
அகிலா வரைந்த படமும் அதையே சொன்னது?
நிறம்,ஒல்லி,குண்டு,நெட்டை,குட்டை???
சிந்தனையால்,ஞானத்தில் உயர்ந்தவருக்கும் வருவது ஏன்??
கண்ணால் பார்பவருக்கு மட்டுமே!!!
பார்வை தினம் சொன்னது
கையால் தொடும் போது உணர்வதே அழகு..
ஞானத்தால் உணர்வதே அழகு .
எங்கும் அழகு எதிலும் அழகு.
Super
ReplyDeleteThank you Veena
ReplyDelete