யாசகம்
உன்னை கண்டதும் என் நடை, உடை, பாவனை
எல்லாம் மாற்றினேன் என்னை கண்டதும்
நீயும் உன் மனதை மாற்றினாய்
ஒரு ரூபாய்க்கு பதில் இரண்டு ரூபாய்
திணித்தாய் என் கைகளில்
நான் பிச்சைக்காரன் என்று நீ
நினைத்துக் கொண்டதால்
நான் பிச்சைக்காரன் தான்
காசுக்காக அல்ல உன் காதலை
யாசித்து நிற்கும் காதலனாய்
புகையின் பகை
இல்லாதவனுக்கு இருப்பதை கொடுப்போம்
என்று சொல்லி புகைக்கும் மனிதர்கள்
பகை ஆயினர் அடுத்தவருக்கு
காசநோய் வந்த பின்னும்
காசு இல்லாமல் தவிக்கின்றனர் மருந்துக்காக
தேவையா இந்த சுகம்
மலர்ந்திடுங்கள் அகம்
மறந்திடுங்கள் பகையாகும் புகையை
வெற்றி
தேர்வில் தோற்ற என்னை தேற்றி ஜெயிக்க வைத்தாய்
என்னிடம் உனக்கு காதல் இல்லை என்று சொல்லி
என்னை மீண்டும் தோற்க வைத்தாய்
இம்முறை தேற்ற எவரும் இன்றி விழுந்தேன்
நான் வாழ்க்கையில் எழுந்தேன்
மறுபடியும் இன்னொரு பெண்ணால்
இப்போதும் மறுக்கவில்லை மறைக்கவில்லை
என் காதலை அவளிடம் ஏனென்றால்
அவளும் வாழ்க்கையை தொலைத்தவள் தான்
காதல்
நீ என்னோடு சேர்ந்து படிக்கும்போது என்
மனதை உன்னிடம் சொன்னேன் நான்
உன்னை விரும்பியதால், மெட்டல் டிடெக்டர்
கொண்டு உன் மனதை ஆராய நினைக்கையில்
அது சத்தமிட்டது ; உறுதியானது ; உன் மனது
இரும்பு தான் என்று
மணக்க விரும்பினேன் என்னை
நினைக்கும் ஓர் கரும்பை
No comments:
Post a Comment