Thursday, October 21, 2021

ஆதங்கம் by Veena Shankar


 

ஆதங்கம் 


காதல் கனவில் பயணிப்போம் என்றாய் 

ஆனால் திருமணம் நடைபெறும் முன்னே!

 நீ சென்றாயே!  மரண பயணத்திற்கு 

கடைசி வரை இருப்பேன் என்று முதலிலேயே

கை விட்டு விட்டாயே!  நான் 

சலனப் பட்டு போனேன் 

உன் பேச்சால் அனாதையான எனக்கு 

ஒரு துணை நீ என நினைத்ததால்

 முதல் கோணல் முற்றும் கோணல்  

ஆனதே என் வாழ்க்கை அப்போதும் 

 தூற்றியது ஊர் என்னை  மட்டும்

திருமணம் நடைபெறும் முன்னே  

விதவையானதால் 

என் வாழ்க்கை உன்னோடுதான் என்ற 

மகிழ்ச்சி பொய்யானது  

உன்  மெய்  பிடிக்கும் முன் 

என் தலையெழுத்து மாறியது 

இன்னும் மறுமணம் செய்ய என் மனம் 

இசையவில்லை ஓருயிர் போதும் என்னால் 

பலியானது;  மனித வடிவில் ஒரு முறை தான் 

மரணம் என்பதும் - ஆனால் 

நான் வாழும் வாழ்க்கையும் உயிருடன் உள்ள மரணமே!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...