Friday, October 1, 2021

இந்த வாரம் "கேள்விக் கணைகள்" by Vidhya Nivash


 

இயற்கையிலேயே பெண்கள் அதிகம் கேள்வி கேட்பார்கள் ...ஏன் கேள்வி கேட்க கூடாதா??


அதில் என்ன தவறு இருக்கிறது?? வீட்டில் வாண்டுகள் கூட அம்மா கொஞ்ச நேரம் வாயை மூடுங்க என்ற அளவிற்கு வந்துவிட்டது நம் நிலைமை???

எப்படி ஒன்றுமே கேட்காமல் ஜடம் போல் இருப்பது ??எதற்கு நாங்கள் படித்தோம் ??கடவுள் எங்களுக்கும் ஏன் அறிவைக் கொடுத்திருக்கிறார்??


புரியவில்லை என்றால் அதைப் புரிய வைக்க வேண்டியதும் உங்கள் கடமை தானே அதை விட்டு வாயை மூடு என்று சொல்வதில் என்ன இருக்கிறது ??

உடன்இருப்பவருக்கு ஒரு பதில் கூட கூற முடியாத உங்களால் எப்படி மற்றவரிடம் பேச முடிகிறது??

யார் கொண்டு வந்தது ஆண் பெண் என்ற வேற்றுமைகளை அங்கிருந்துதான் இத்தனை கேள்விகளும் வந்தன ??


பெண்களுக்கு மட்டும் ஏகப்பட்ட விதிமுறைகள் அதை மீறினாலும் அதற்கு பெயர் வேறு ஒன்று ,இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க நாங்கள் கத்துக்க வேண்டும் எங்களுக்கு பிடித்தவற்றை எங்கள் மனதை நாங்கள் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் சொற்பொழிவுகளை கேட்டு ,திரைப்படங்களைப் பார்த்து மனத்திற்கு பிடித்தவற்றை செய்து எங்களை நாங்களே பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா???


காரில் கொஞ்ச நேரம் ஏசி வேலை செய்யவில்லை நம்மால் இருக்க முடியவில்லை ???

ஆனால் ஒருவர் கொளுத்தும் வெயிலில் வேலை செய்து கொண்டிருக்கிறார் ஏன் இந்த வேற்றுமை ???


எங்கிருந்து வந்தது இந்த வேற்றுமை வெளியில் இருக்கும் கழிவறைகள் எப்படி இருக்குமோ என்ற சந்தேகத்தில் நாம் போய் வந்தவுடன் அதை சுத்தம் செய்வதற்காக காத்திருக்கும் பெண் ஏன் இந்த வேற்றுமை ???


யார் உரிமை கொடுத்தது பெண்களைப் பற்றி அவதூறாக பாடல் எழுதுவதற்கு அதையும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் நானும் ஒருத்தி தானே??? 70 வயது ஆகியும் இன்னும் கதாநாயகன் , கூட நடிக்கும் கதாநாயகிக்கும் மட்டும் ஏன் 70 வயதில்லை???


மரம் நட வேண்டாம் ,நீ காடுகளை பாதுகாக்க வேண்டாம் ,சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டாம் ,ஆனால் சின்ன குழந்தைகள் என்ன செய்தன ???


கேள்விகள் பல நூறு தீ போல் இருக்கிறது உள்ளே .. ஏன் இந்த எண்ணங்கள் வருகிறது உலகில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கிறது அல்லவா??? ரசிக்க எவ்வளவோ இருக்கிறது அல்லவா???


நான் ரசிக்கும் அதே உலகத்தில் தானே இத்தனை கஷ்டங்களும் நிறைந்திருக்கிறது. தினமும் தேவையில்லாத பல செய்திகள் வருகின்றன ,தேவையான பலவற்றை கண்டும் காணாமல் இருப்பது ஏன் ???கோவை சரளாவும் ,வடிவேலும் வரும் காமெடியை பார்த்து ரசித்துக் கொண்டே இருப்போம் நடப்பது என்ன???


1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...