Thursday, October 21, 2021

இந்த வாரத்தலைப்பு "இயற்கை" by Vidhya Nivash

 

இயற்கை சொல்லிலே இனிமை நிறைந்து ததும்பும்..

அது ரம்மியமானது ரகசியமானது

எங்கோ பெய்யும் மழை நம்மை இழுக்கும் மண் வாசனை அதற்கு உண்டோ இணை..

கடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் பவளப்பாறையும் பல வண்ண ஜீவ ராசிக்களும்..

எங்கும் பச்சை போர்த்திய பட்டாடை ,எத்தனை எத்தனை எண்ணில் அடங்காத வண்ண கலவைகள்....

கொஞ்சி குலாவும் ராகங்கள்..

மயக்கும் வாசனைகள்..

வானுயர மரங்கள்,மேகங்கள் தாவிச்செல்லும் மலைக்கூட்டங்கள்..

தேன் சொட்டும் பனித்துளிகள்,

கொதிக்கும் வெண்ணீர் ஊற்று,மெய் சிரிக்கும் ஈரக்காற்று..

மூடிய பெட்டிக்குள் உயிரின் பிறப்பு...அதே போல் பூவின் குவளையில் நுழைந்தால் உயிரின் பிரிவு..

இவை அனைத்தும் விட இதை ரசிக்க சரியான இடத்தில் இரண்டு கண்கள்,இரண்டு காதுகள்,ஒரு வாய், இரண்டு தூரங்களுடன் ஒரு மூக்கு,இரண்டு கைக்கள்,கால்கள்,நகம்,முடி,உள்ளுக்குள் பல இவை அனைத்தும் யோசித்து பாருங்கள் எவ்வளவு அருமையான படைப்பு...

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...