மறுநாள் உதிரும் -என
தெரிந்தும் மலரும் மலர்களுக்கு ...
மறுபடியும் வந்த வழி தான் -என
தெரிந்தும் கரை மோதும் அலைகளுக்கு ...
மாலையில் அந்தி சாயும்- என
தெரிந்தும் நேரம் தவறாது எழும் கதிரவனுக்கு...
மறுக்காமல் சில நிமிடங்களில் நீர் நிலை தான் -என
தெரிந்தும் விழும் பால் பனித்துளிக்கு...
மனித மனம் வெட்ட நினைத்தாலும் மீண்டும் துளிரும் இயற்கைக்கு ...
கோடான கோடி நன்றிகள் ....
இயற்கை இல்லையேல் ....
ரசனை எங்கே?
நம் முதல் கவிதை தான் எங்கே?

No comments:
Post a Comment