செல்ல குழந்தைகள் நொடி பொழுதில் செய்யும் கைமாறுக்கு கண்ணில் பூப்பாய்
முன்பின் தெரியாதவர் செய்யும் உதவிக்கு புன்னகையுடன் வருவாய்
உணர்வால் உணர்ந்து உயிராக உடன் இருப்போர் கொடுக்கும் கைக்கு உணர்வுபூர்வமாக வருவாய்
ஆக மொத்தத்தில் உனக்கு நிகரான வார்த்தையில்லை வையகத்திலே ...
சிந்தனையை தூண்டி, வாய்ப்பு கொடுத்தற்கு உன்னையே அழைக்கிறேன் "நன்றி"

No comments:
Post a Comment