ஐந்தறிவும் ஆறறிவும்
ஒருவன் ஓர் அமைதியான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். பெரிய பங்களாக்கள் இருந்த இடம் என்றாலும் அங்கே எங்கிருந்தோ வந்த இரு தெரு நாய்கள் இவனைப் பார்த்து மோசமாக குரைத்துக் கொண்டே துரத்தின. அதை சற்றும் எதிர்பாராத அவன், தன்னை காத்துக் கொள்ள வேறு வழியில்லாமல் ஓட, அவனை விடாது நாய்கள் துரத்தின. ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் ஓட முடியாமற் நிற்க, நாய்களும் அவன் என்ன செய்ய காத்திருக்கிறான் என்பது போல அவனை பார்த்தன. அவன் நாய்களிடம், "நான் திருடன் அல்ல, திசை மாறி இங்கே வந்து விட்டேன். அதுவும் நீங்கள் என்னை கடித்து குதற மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு. ஆனால் ஏதோ ஓர் அச்சத்தில் உங்களை பார்த்ததும் என் மனம் ஓட சொன்னது . அதுவும் குரைக்கிற நாய் கடிக்காது என்று கேள்விப்பட்டுள்ளேன். எனவே நீங்கள் என்னை ஒன்றும் செய்ய மாட்டீர்கள் என்று தன் வழக்கமான ஆவர்த்தனத்தை காட்டினான் . மேலும் நாம் மூவரும் ஸ்நேகமாக இருப்போம் " என்றான்.
அதை கேட்ட நாய்கள் சிரித்தன. ஏன் என்பது போல் அவன் அவைகளைப் பார்க்க,
ஐந்தறிவு ஆறறிவை பார்த்து சொன்னது,
" உன்னை நாங்கள் எப்படி நம்புவது? நீ தான் மனிதானாயிற்றே? நீ எப்போதும் பிறரை பரிகாசம் செய்பவனாயிற்றே? பின் உன்னை நாங்கள் எப்படி நம்புவோம்? உன்னை நாங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் உன் இனத்தவர் யாரும் தவறு செய்யும் போது நீ தைரியமாக அவர்கள் தவறை உணர்த்து! எங்களைப் போல் அவர்களிடம் வெளிப்படையாக உன் உணர்ச்சியைக் காட்டு. அவரை பற்றி புறம் சொல்லாதே!" என்று சொல்ல,
ஐந்தறிவின் ஆலோசனையை ஆறறிவு ஏற்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

No comments:
Post a Comment