கல்லும் மண்ணும் சிகரத்தை தொட உதவும் போது, இந்த கண்ணாடி துண்டுகளும் பாதையாகும் மன உறுதி கொண்ட அணிலுக்கு
கண்ணாடி துண்டுகள் குத்தும் என்று உணராத போது கால்கள் குருதியில் ரணமாயின, அதுவே தேவை என்பது நீளும் போது கண்ணாடி துண்டுகளும் வழி சொன்னது, இரண்டு துண்டுகளுக்கு இடையே வளைந்து நெளிந்து இலக்கை அடையச் சொல்லி
காணும் பார்வையில் பாதை தெளிவில்லையென்றாலும் இலக்கு முன்னே தெரியும் போது மனம் தெளிந்து கொண்டே செல்லும்

Beautiful
ReplyDeleteThank you Anitha
Delete