Friday, July 19, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 பல சுமைகள் தாங்கும் முதியவரை தாங்கிய காலணிகள் கூட பாடம் சொன்னது, சுமப்பவனுக்கு என்றும் இளகிய மனது என்று, தன்னிலையை காட்டி

சுமையின் மையப்புள்ளி முதியவரின் கால்கள்


தலைக்கவசமாய் மாறிய வாழைத்தார்

தோள் சாயும் வயதில் தோளோடு தோற்பை 

இளைய சந்ததியரை பற்றிக் கொண்டு செல்லும் கரத்தில் தூக்கு சட்டிகள்

இது தான் இவரின் சுதந்திரமா?

இல்லை 

மனைவியை காப்பாற்றும் பொறுப்பா?

இல்லை

தானாய் விரும்பி செய்யும் பிழைப்பா?

இல்லை

அதிகாரத்தின் விளைவால் கொண்ட பயணமா?

இல்லை 

இளைப்பாற வேண்டிய வயதில் கொள்ளும் தளர் நடையா?

பூமியின் புவியீர்ப்பு விசையில் , அவர் நடையின் மையப்புள்ளி அவர் கால்களுக்கிடையில் 

பலவற்றின் சங்கமமாய்

சிலவற்றின் பாரமாய்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...