தான் கால் கொண்டு பூட்டிய பூட்டை
தன் வேல் கொண்டு திறப்பது எளிது
திறவுகோல் இல்லா பூட்டும்
அளவுகோல் இல்லா வடிவமும். வீண்
ஓட்டைகள்பல இருந்தாலும் உள் கொள்ளும் திறவுகோல் ஒன்று தான்
என் மனக் கதவின் சாவி தொலைந்து போனது என்று அதை உன்னிடம் நான் விசாரிக்க, நீயும் இல்லை என்று பதில் தந்தாய். என் மனக்கதவின் சாவி தொலைந்து போனது என்று நினைத்திருந்த எனக்கு உன் நிலையும் அதுவே என்று எண்ணத் தோன்றியது, அப்போது கூட நீயும் உன் மன எண்ணத்தை என்னிடம் பகிராததால்
படைத்தவை ஏதும் அழிவில்லை
உடைந்தவை ஏதும் குறைவில்லை
இங்கே வழி கொள்ள உதவியதால்

No comments:
Post a Comment