அவன் வருவான்?
வருவான் என்று நினைத்தேன் வாராமல் இம்சை தந்தான்
இனிமையான சுகத்தை தருவான் என்று நினைத்தேன் அவன் வரவில்லை
வரவேண்டாம் என்று நினைத்தே என் பணியை தொடர நினைத்தேன்
என் கண் முன்னே வேண்டுமென்றே தன்னை வெளிக்காட்டி நிழலாடினான்
தருவான் என்று நினைத்தேன் ஆனால் என் எவ்வித முயற்சியும் ஆதாரமில்லாமல் அழிந்தது
தரமாட்டான் என்று நினைத்தேன் எனக்கான அவன் நினைவுகளையும் சேர்த்தே தந்து விட்டு போனான்
காரணம் அறியாமல் அவனை தேடியதில் எனக்கு தலைவலிதான் மிஞ்சியது
அவனை அனுபவித்தது காணாமல் என் சோம்பல் நீளாமல் இருக்க
குடிக்கும் பானமும் தயாரித்து குடித்தேன்
என் தேவையும் அவன் செல்வாக்கும் உயர இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் தனித்தனியே பிரிந்தோம்
நம்பிய என்னை ஏமாற்றிவனும் நீயே!
உனை நம்பாமல் ஏமாறியவளும் நானே!
மீண்டும் என் உணர்ச்சியில் தொய்வு ஏற்பட அவனை நான் தேடினேன்
அவன் வருவானா? என்ற எதிர்பார்ப்பிலும்
அவன் வரமாட்டான் என்ற கவலையிலும் நான் என் இரவு நேரத்தை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது
இதில் உங்கள் அனுபவம் எப்படி?
என்னவன் யாரென்று அறிந்தீர்களா?

No comments:
Post a Comment