Saturday, July 20, 2024

சொல்லாக்கம் by Veena Shankar

 


சொல்லாக்கம்


வகுப்பறையில் ஆசிரியருக்கு சொல்வது வணக்கம் 

புரியாத பாடமென்றால் வகுப்பில் தூக்கம் 

தேர்வில் தெரிந்த வினாவிற்கு மட்டுமே விளக்கம்

மதிப்பெண் கொடுப்பதில் ஆசிரியருக்கு ஏனோ சுணக்கம்

மன்றாடி கேட்டால் கன்னத்தில் வீக்கம்

இல்லையேல் வகுப்பறையிலிருந்து நீக்கம் 

விளைவு படிப்பில் தேக்கம்

வீட்டில் காண்பித்தால் வெளிப்படும் துக்கம் 

மீண்டு வந்து படிப்பில் கொள்ளும் ஆக்கம் 

பெற்றோரும் கொடுப்பதில்லை நமக்கு ஊக்கம்

இதனால் பிள்ளைகளுக்கு பிறக்குது ஏக்கம்

எல்லாமே இந்த பரீட்சையினால் வரும் தாக்கம்

அடுத்த தேர்வில் வெற்றி பெறுவதே நோக்கம்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...