சொல்லாக்கம்
வகுப்பறையில் ஆசிரியருக்கு சொல்வது வணக்கம்
புரியாத பாடமென்றால் வகுப்பில் தூக்கம்
தேர்வில் தெரிந்த வினாவிற்கு மட்டுமே விளக்கம்
மதிப்பெண் கொடுப்பதில் ஆசிரியருக்கு ஏனோ சுணக்கம்
மன்றாடி கேட்டால் கன்னத்தில் வீக்கம்
இல்லையேல் வகுப்பறையிலிருந்து நீக்கம்
விளைவு படிப்பில் தேக்கம்
வீட்டில் காண்பித்தால் வெளிப்படும் துக்கம்
மீண்டு வந்து படிப்பில் கொள்ளும் ஆக்கம்
பெற்றோரும் கொடுப்பதில்லை நமக்கு ஊக்கம்
இதனால் பிள்ளைகளுக்கு பிறக்குது ஏக்கம்
எல்லாமே இந்த பரீட்சையினால் வரும் தாக்கம்
அடுத்த தேர்வில் வெற்றி பெறுவதே நோக்கம்

No comments:
Post a Comment