Tuesday, July 23, 2024

நாற்காலி by Veena Shankar

 


நாற்காலி


மழலையில் அமரும் நாற்காலி அழகுக்காக மட்டுமல்ல பிள்ளையின் செயலை கட்டுப்படுத்தவும் தான்


வாலிபத்தில் தேடி பிடிப்பது மட்டுமல்ல நாற்காலி, மூப்பில் தானாகவும் அமையும் தன்மை கொள்வதால் தான்


சமையற்கட்டில் தாயின் அசதிக்காக மட்டுமல்ல நாற்காலி, அவள் தெய்வமாகவும் மதிக்கப்படுவதால் தான்


கூடத்தில் வசதிக்காக மட்டுமல்ல தந்தையின் நாற்காலி, வாழ்வின் முக்கிய முடிவெடுக்கும் தருணத்திற்கும் தான்


சாய்ந்து ஓய்வெடுக்க மட்டுமல்ல நாற்காலி நம் வாழ்வின் மிஞ்சிய நாட்களை கடத்தவும் தான்


சொந்த கால்கள் இழந்த போதும் பின் தொடரும் இந்த நாற்காலியின் பந்தம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...