கண்ணாடியில் விழும் பிம்பம் எப்போதும் மாயை தான். அதை விருப்பம் போல் கொள்ள நினைப்பது அழகல்ல, அறிவல்ல
குறையை கண்டால் நிறை காண முடியாது
நிறையைக் கண்டால் குறைந்து போவது கிடையாது
உண்மையைக் கொள்ளாமல் நிறம் மாறிய பிம்பம், கண்ணாடியின் தூசியினால் மட்டுமல்ல, மாசு என்பதினால்
மனம் மட்டும் தெளிவு கொண்டால் ஆகாது, பிரதிபலிக்கும் பிம்பமும் தெளிவாய் இருக்க வேண்டும், நிஜம் நிழல் காணும் சமயத்தில்
நிஜத்தில் இருக்கும் தேநீர் எனக்கு, நிழலில் இருப்பது உனக்கு என்று சொல்வதால் மட்டுமே நிழலும் நிஜமாகும் இங்கே
நிழல் என்னும் திரையை விலக்கினால் நிஜம் தெரியும்
நிஜம் என்கிற உண்மை விளங்க
நிழலும் நிஜமும் வேறு என்ற ஞானம் பிறக்கும்

Nice Veena
ReplyDeletethank you Anitha
Delete