இன்றைய மினி கதை
கணவன் தீடீரென நோய்வாய்பட , அவன் கஷ்டப்படுவதைப் பார்த்த மனைவி, கோயிலுக்கு வந்து கடவுளைப் பார்த்து "உனக்கு கண் இல்லையா? ஏன் அவரை இப்படி சோதிக்கிறாய்? அவர் என்ன தவறு செய்தாலும் மன்னித்து விடு. ஏன் நானும் கூட தவறு செய்திருக்கலாம். அதையு ம் மன்னித்து விடு" என்று உரத்த குரலில் இறைவனை கேட்டுக் கொண்டிருக்க, அங்கே அமர்ந்திருந்த அடியார் ஒருவர் அவள் வேண்டியதை பார்த்து அவளிடம் " நீ உன் கணவன் உடல் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்கிறாய். ஆனால் அதில் தவறு இருப்பதாக நான் நினைவிறேன், உன் கணவன் தவறு செய்தால் மன்னிக்குமாறு சொல்லும் நீ " நான் கூட தவறு செய்திருக்கலாம்" என்ற சொல் நெருடலாக இருக்கிறது, தவறு செய்யாத மனிதர் இல்லை, அப்படியிருக்க நீ நான் கூட தவறு செய்திருந்தால் மன்னிக்கவும் என்று கூறியதால் அங்கே உன் அகம்பாவம் வெளிப்பட்டு நிற்கிறது. " என்று கூறி அவள் பதிலுக்கு காத்திராமல் அவ்விடம் விட்டு நகர்ந்தார். தன் தவறை மனைவியும் உணர்ந்து தான் முன்பு சொல்லியதை திருத்தி கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.
நம்மை அறியாமல் நாம் செய்யும் செயலும் பேச்சும் நமக்கு பின்னடைவை தரும் என்பது உண்மை.

No comments:
Post a Comment