பட்டு போன மரங்கள்
ஒன்று வேருடன்
மற்றொன்று வேர்வையுடன்
முதுமை இரண்டு
இங்கே கலங்கியபடி
ஒன்று எரியூட்ட
ஒன்று எரிபட
இரண்டிற்கும் அழிவு
ஒரே நேரத்தில்
கைகளில் சாம்பலாய்
மரம் உயிர் பெற்றது
முதியவரின் மனதினிலே
முதுமையும் கொண்டதால்
உடலும் மரத்துப் போனது
துளிர்விடும் மரமும்
காய்ந்த மனமும்
மனிதம் பிறப்பதிலே!
- Veena
வேரூன்றி, பல விழுதை தாங்கி,
பூத்து,பழுத்து,விதைத்து, பட்ட
மரம் ....
பட்ட மரம், கதை சொல்ல விட்ட
மரம்,மீண்டும் துளிர்விட,சிறு
துளி ஆதரவாய் கைக்கொடுக்க
மீண்டும் பிறப்போம்,படைப்போம்
பல ...
- Vidhya

No comments:
Post a Comment