Sunday, November 2, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பட்டு போன மரங்கள்

ஒன்று வேருடன் 

மற்றொன்று வேர்வையுடன்


முதுமை இரண்டு

இங்கே கலங்கியபடி 

ஒன்று எரியூட்ட

ஒன்று எரிபட 

இரண்டிற்கும் அழிவு

ஒரே நேரத்தில்

கைகளில் சாம்பலாய்


மரம் உயிர் பெற்றது

முதியவரின் மனதினிலே

முதுமையும் கொண்டதால்

உடலும் மரத்துப் போனது 

துளிர்விடும் மரமும்

காய்ந்த மனமும்

மனிதம் பிறப்பதிலே!

- Veena 

வேரூன்றி, பல விழுதை தாங்கி,

பூத்து,பழுத்து,விதைத்து, பட்ட

 மரம் ....

பட்ட மரம், கதை சொல்ல விட்ட

 மரம்,மீண்டும் துளிர்விட,சிறு

துளி  ஆதரவாய் கைக்கொடுக்க

 மீண்டும் பிறப்போம்,படைப்போம்

 பல ...

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...