எவனுக்கு எவன் செய்யும் உதவி
எலும்புக்கூடாய் மாறிய மனிதனுக்கு
பணம் தேவையில்லை
பணம் பத்திரமாய் பாதுகாக்க இவன் மனிதனுமில்லை
உன் கடைசி சடங்கிற்காகவாவது பணத்தை சேமிக்க சொல்கிறது
இந்த எரியூட்ட பணமில்லாததால் மாறிய எலும்புக் கூடு
மனங்கள் பார்த்து பூத்த காதல்
இங்கே
ஒன்று பணமாய் மற்றொன்று எலும்புக்கூடாய்
பணத்திற்கு மனம் விலை போனதால்
இந்த அவலம்
- Veena
இது மட்டுமே நிரந்தரம் என்பதை
நிரந்தரமற்றதே
கற்றுக்கொடுக்கும் ..
ஒன்றின் பின்னால் ஓடும் போது
பல மாற்றங்கள் வரும் ஆனால்
அதில் மெய்யை உணர தனது
மெய்யை மறந்துவிடும் மாக்கள்!
- Vidhya
இங்கு
எதுவுமே நிரந்தரம் இல்லை...!..
அது -
மனமோ..
பணமோ...!..
இருந்தும்...
இரண்டின் ஒன்றின் பின்னே தான்..செல்கிறது பலரது வாழ்க்கையும் இங்கே...!....
பற்றாக்குறையும் சரி..
அளவுக்கு மீறினாலும் சரி ...
ஆபத்து தான்...!..
ஒன்று
வறுமை..
இன்னொன்று..
வெறுமை...!..
பணம் இல்லாது மனம் - வாழ ..வறுமை பழக செய்யும்..!..
ஆனால் ...
மனம் இல்லாது
பணம் - பிணமாக தான் ஆக்கும் ..!..
உயிர் இருக்கும் போதே...!....
- Kiruthika

No comments:
Post a Comment