Tuesday, September 30, 2025

படமும் கருத்தும் by Veena, Kiruthika and Vidhya

 


எவனுக்கு எவன் செய்யும் உதவி

எலும்புக்கூடாய் மாறிய மனிதனுக்கு

பணம் தேவையில்லை

பணம் பத்திரமாய் பாதுகாக்க இவன் மனிதனுமில்லை


உன் கடைசி சடங்கிற்காகவாவது பணத்தை சேமிக்க சொல்கிறது

இந்த எரியூட்ட பணமில்லாததால் மாறிய எலும்புக் கூடு

மனங்கள் பார்த்து பூத்த காதல்

இங்கே

ஒன்று பணமாய் மற்றொன்று எலும்புக்கூடாய்

பணத்திற்கு மனம் விலை போனதால்

இந்த அவலம்

- Veena 


இது மட்டுமே நிரந்தரம் என்பதை

 நிரந்தரமற்றதே

 கற்றுக்கொடுக்கும் ..

ஒன்றின் பின்னால் ஓடும் போது

 பல மாற்றங்கள் வரும் ஆனால்

 அதில் மெய்யை உணர தனது

 மெய்யை மறந்துவிடும் மாக்கள்!

- Vidhya 

இங்கு 

எதுவுமே நிரந்தரம் இல்லை...!..

அது -

மனமோ..

பணமோ...!..

இருந்தும்...

இரண்டின் ஒன்றின் பின்னே தான்..செல்கிறது பலரது வாழ்க்கையும் இங்கே...!....

பற்றாக்குறையும் சரி..

அளவுக்கு மீறினாலும் சரி ...

ஆபத்து தான்...!..

ஒன்று

வறுமை..

இன்னொன்று..

வெறுமை...!..

பணம் இல்லாது மனம் - வாழ ..வறுமை பழக செய்யும்..!..

 ஆனால் ...

மனம் இல்லாது 

பணம் - பிணமாக தான் ஆக்கும் ..!..

உயிர் இருக்கும் போதே...!....

- Kiruthika 


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...