'துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள் ' என்ற கலாம் ஐயா மொழிதலை என்றுமே முன்னெடுங்கள்!
கஷ்டம் தானே வருகிறது;
கழுத்துக்கு என்ன கத்தியா வருகிறது ?
பெண்களே!
எத்தனை முறை நன்மையான அல்லது நமக்குப் பிடித்த விஷயங்களை செய்ய முற்படும்போதும் வீட்டிலிருந்தே அனுமதி மறுக்கப்படுகிறதோ அத்தனை முறையும் குரல் கொடுங்கள் பல தலைமுறைகளாக பின்பற்றும் அர்த்தமில்லா வரைமுறைகள் தைத்த கயிற்றை அவிழ்த்தோ☝️ அறுத்தோ☝️
-ரேவதி சக்தி
நூறு இழைகள் இணைந்தாலும்
தாங்கும் சக்தி
ஓரிழைக்கு கூட உண்டு
பிணைப்பது எளிதல்ல
பிணைந்திருப்பதும் எளிதல்ல
ஆனால் பிரிவதும் பிரிந்திருப்பதும்
அதனின்று
மீள்ந்து வாழ்வதும் கடினமே!
தாங்க கூடிய பாரத்தை பொறுத்தே
கயிற்றின் உறுதி தன்மையை அளவிட முடியும்
அதுபோலத்தான்
எந்த ஒரு உறவும்
மனதின் வலியை
பொறுத்தே அமையும்
சேர்வதும் பிரிவதும்
பிரிந்தும் விலகாமல்
எட்ட நின்று பார்ப்பதும்
உறவின் உறுதியே!
கயிற்றை பின்ன தெரிந்த
மனிதனுக்கு உறவுகளிடம் பின்னியிருக்க
மறப்பது ஏன்?
- Veena Shankar
*அறுத்தலும் தேவை*
தேவை- சினமும் தேவை; அன்பை போலே!!
தேவை- கசப்பும் தேவை; இனிப்பை போலே!!
தேவை- பிரித்தலும் தேவை; சேர்த்தலை போலே!!
தேவை- அறுத்தலும் தேவை -ஆக்கத்தை போலே!!
அறுத்தெறிவோம்- தலை கீழ் விகிதங்களை✨️
- Akhila
நூலிழை போதும் நம்பிக்கையில் அது சேர..
ஆயிரம் கண்கள் சொல்லும் அது பிரியும் என்று,
இரண்டோ பல கைகள் பின்ன இணைந்தன! ஒற்றை விரல் நுனி பட்டால் ஐயோ?
பலம் வலுவிழக்க ஒரு பாலம் உடையுதே! பிரிந்தன என்று தூக்கி எறிய...
இல்லை முடிச்சு போட, அது உறுதியாக அல்ல.. முடிச்சாக உறுத்தாத! எதுவும் சாத்தியமே மனமிருந்தால்...
- Vidhya Nivash
என்ன சத்தம் இங்கே?
புரிதல் இல்லாத
இழைகள் பிரியும் சத்தமா?
சேர்ந்து கைகோர்த்த
நொடிகள் வெற்றிக்
கொண்டாட்டமே!
இணைக்கும் வகையில்
இணையும் இழைகள்
அல்லாது
இணைப்பவர் கூட
இணைந்து கைகோர்க்கும்
பலரது உழைப்பிற்கு
ஓர் அடையாளம்
பிரிவு ஒன்று இல்லை எப்போதும்
திரிக்கப்படுவது தாம்புக் கயிறோ,
தாலிக்கயிறோ!
திரியாமல் மனம் இருக்கவே
வேண்டுவோம்
தீர்வு காணா செயலுக்கு
தவறாக துணை
போகும் போது
இழையில் பிரிதல்
கொண்டால் தவறில்லை
ஓர் உயிர் பிரியாமல்
இருக்கவே
சரியான நேரத்தில்
சரியான பாதைக்கு
மேற்கொள்ளும் முடிவு
ஒன்றிணைந்த இழைகள்
போலே உறுதி அடையும்
பிரியும் இழைகளாய்
இல்லாமல் ஒன்றிணைக்கும் செயலாய்
இருப்பது என்றும் அறிவே!
பணமா? பாசமா?
யாருக்கு பலம் அதிகம்
என்ற இருதரப்பினர்
போட்டியில் அறுப்பட
காத்திருக்கிறது கயிறு
இரண்டிற்கும் காரணமாய்
இழைகள் பிரிய பிரிய
எதற்கும் நம்பிக்கை
மட்டுமே விடை என்று
சொல்லி பாலமாய் நின்று
ஓரிழை நம்பிக்கை தந்தது
- Veena Shankar

No comments:
Post a Comment