அம்பேத்கர் உயரவில்லையா?
அப்துல்கலாம்
சிறப்பு அடையவில்லையா?
சாதாரண சித்தாந்தன் கெளதம புத்தன் ஆகவில்லையா?
முடியும்!முடியும்!முடியும்!-என்று உரக்கச் சொல்லிக் கொள்ளுங்கள் உங்களுக்குள்💯பாறையின் இடுக்கே கூட வேரூன்றி வளரும் இம்மரத்தைப் போல - விடாமுயற்சியும் நம்பிக்கையும்
நேர்மறைச் சிந்தனைகளும் நமக்குள்ளும் வேரூன்றச் செய்திடுவோம்🩷
-ரேவதி சக்தி
எவர் எதை தாங்க,
இடம் கொடுத்தவருக்கு உயிரை கொடுக்க ஒன்று,
தன்னை நம்பி வந்தவனுக்கு தன் பலத்தை,அடையாளத்தை விட்ட ஒன்று,
இதில் எது பெரியவர் என்ற அலங்காரம் அழிய குணத்தால் உயர்ந்த இருவர்,
இவர்களை யாரும் தொந்தரவு செய்யாவிடில் பல உயிருக்கு பாலமாகும் இந்த நட்பு!
-Vidhya Nivash
உயர்ந்தவர் யாரென்ற
தர்க்கம் இல்லை
ஒருவரை ஒருவர்
மதிக்க தெரிந்த இடத்தில்
பாறையிலும் நீர் சுரக்கும்
மரத்திலும் வலிமை இருக்கும்
ஒருவரின் குணம்
மற்றவர் அறிந்த போதும்
அமைதி ஒன்றே என்றும்
உயிர்த்திருக்கும் என்ற
சிந்தனை மனதில்
எழுந்தால் எதுவும்
துச்சமே!
இருவர் கூட்டணியில்
ஓர் அணியாய்
வலம் வர
வெற்றி என்றும் அதற்கே!
மறப்பதும் சிறப்பே
அடுத்தவர் பிழையை
பதவியின் பால் போதை
கொள்ளாது - பிறர்
நன்மை கருதி
எதிரியை எதிர்க்க
வளம் கொள்ளும்
எண்ணிய வாழ்வு
என்ற போது மட்டுமே
இந்நட்பு என்றும் தொடரும்
- VeenaShankar
இணையர் வேர்கள் வலுவாக இருப்பின் -
எந்த கொம்பனாலும்
(பாறையானாலும்😎)
வீழ்த்த முடியாது!
பெண் மரம் - கீர்த்தி சிறிதோ, பெரிதோ- அது தோளிலே தாங்கும்💪
குலம் காக்கும்🫂🥰
- Akhila
.jpg)
No comments:
Post a Comment