Sunday, April 26, 2026

சிந்தனை துளி by Veena Shankar

 


ஒரு குப்பிக்கு ஒரு குப்பி 

இலவசம் என்றான்

மது விற்பனையாளன் 

ஒரு குப்பி மதுவுடன் 

ஒரு குப்பி தண்ணீர்

இலவசம் என்பதால்

தண்ணீருக்காக சென்றேன் அங்கே

மதுவை விடுத்து தண்ணீரை 

பத்திரப்படுத்தினேன் குடிநீர் கிடைப்பது கஷ்டம் என்பதால் 

தாகம் கொண்டதால்

தண்ணீர் குடித்தேன் 

தாகம் தீர்ந்தேன்

எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு துளி மதுவை குடித்தேன்

என்னையே மறந்தேன்

எதுவும் தன்னாலே மறைந்து தீர்ந்ததாலே !


இப்படிக்கு 

மதுவை முதன் முதலில் குடித்து பழகியவன்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...