ஒரு குப்பிக்கு ஒரு குப்பி
இலவசம் என்றான்
மது விற்பனையாளன்
ஒரு குப்பி மதுவுடன்
ஒரு குப்பி தண்ணீர்
இலவசம் என்பதால்
தண்ணீருக்காக சென்றேன் அங்கே
மதுவை விடுத்து தண்ணீரை
பத்திரப்படுத்தினேன் குடிநீர் கிடைப்பது கஷ்டம் என்பதால்
தாகம் கொண்டதால்
தண்ணீர் குடித்தேன்
தாகம் தீர்ந்தேன்
எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு துளி மதுவை குடித்தேன்
என்னையே மறந்தேன்
எதுவும் தன்னாலே மறைந்து தீர்ந்ததாலே !
இப்படிக்கு
மதுவை முதன் முதலில் குடித்து பழகியவன்

No comments:
Post a Comment