படுத்துக் கொண்டிருந்த என்னை
நகர பணித்தான்
நகர்ந்து சென்ற என்னை
நடக்க பணித்தான்
நடந்து சென்ற என்னை
ஓடப் பணித்தான்
ஓடிக் கொண்டிருந்த என்னை
நிற்கப் பணித்தான்
நின்ற போது தான்
அறிந்து கொண்டேன்
நான் சென்றது தொடர் ஓட்டமென்று
தொடர் ஓட்டத்தை
நிறுத்த பணித்தான்
என்னை படுக்கையிலிட்டு
எதுவும் சாத்தியம் அவனாலே!
அவனே மனித மனம்
இப்படிக்கு
மனிதக் (குரல்) குமுறல்
சகதியில் மூழ்கினால் கூட ஓராயிரம்
கதை சொல்லும்
இளமைபருவம்
இரவு அல்ல அது
எங்கும் இருள் சூழ
இரவிலும் நிலா வெளிச்சத்திலும்
விளையாடும் கூட்டத்தின் மத்தியில் இல்லை பாகுபாடு நிரந்தரமாய்
வீட்டிற்கு ஓர் நிலவு
கொண்டால் கூட அதிசயம் இராது வருங்காலத்தில்
இருப்பினும் விளையாட்டு மட்டுமே தனித்து
இருக்கும் அவரவர் கையில்
உலகம் அடக்கம் என்பதால்
சிந்திக்க ஒன்று
செயல்படுத்த ஒன்று
வஞ்சிக்க ஒன்று
வாரி அணைக்க ஒன்று
என பிரிந்து நிற்பவை
சேரும் நாளும் நேரமும் அறியாது
நகைத்திருப்போம்
நன்றாய் வாழ்வோம்
வஞ்சகம் ஒழிப்போம்
வசந்தம் வரவேற்போம்
-Veena
சேற்றில் விளையாட சொறிசிரங்கு
என்றனர் இன்று அதற்கு ஒரு
பெயர் வைத்து தேகத்திற்கு நன்று
என்று விற்கின்றனர்.
மண்ணில் புரண்டவனுக்கு நோய்
அண்டாது ,தன் உடம்பையும்
மண்ணையும் ஆள்வான்..
அள்ளி அள்ளி துள்ளி துள்ளி
விளையாடிய காலம்,குழந்தை
பருவமே வரம் !
- Vidhya

No comments:
Post a Comment