இருமுகம் காட்டின் ஒன்றும் இல்லாமல் போகும்... ஐயோ பாவம்
தக்க நேரத்தில் தோன்றாத
அன்பும்,
தர்க்க நேரத்தில்
தோன்றாத
கோபமும்,
உதவிடுமோ தோழி?
- Akhila
முகங்கள் பல உண்டு இங்கே
தேவைக்கு மாற்றிக் கொள்ள
இதில் உண்மையான முகம்
எதுவென்ற கேள்விதான்
குழப்பமாய் மனதில்
வியாபிக்கிறது
கரத்தில் உள்ள முகங்கள்
சபையே றா விட்டாலும்
சந்தர்ப்பங்கள் வரும் போது
சுயநலம் கொள்ளும்
பகிரப்படும் வார்த்தைகள்,
காதல், அன்பு, நட்பும்
எல்லாமும் மறந்து போகும்
நீ நீயாய் இருந்
என்பதைக் காட்டிலும்
எதுவும் நிரந்தரமாய் காட்டு
என்று சொல்வதே சிறப்பு
முகமூடி மாற்றினால் மட்டும் என்ன குணம் மாறி விடுமா?
இல்லையே!
மாற்றும் முகமூடியிற்கேற்ப
மாற்றம் கொள்வது
சாத்தியம் கலைஞனுக்கு மட்டுமே!
என்றாலும் உண்மை
இயல்பு மாறாது
வேடம் கலைத்து
முகமூடி நீக்கிய பின்னால்
உனக்கு நீயே யாரென்று
தெரியாத போது
அடுத்தவரை குறை சொல்லவும்
விமர்சிக்கவும் எவர்
கொடுத்தார் உரிமையை?
ஒருவருக்கான வாய்ப்பை
தட்டி பறிப்பதும்
ஏமாற்றி கைப்பற்றுவதும்
இந்த முகமூடி எனும்
மாயவலையினாலேயே!
ஓர் உடம்பிற்குள் எத்தனை
முகங்களை பொருத்துவது?
எத்தனை சிந்தனைகளை அடக்குவது?
எத்தனை பாவனைகளை காட்டுவது?
எல்லாம் வீணாகும் ஓர் நாள்
நம் உடல் மண்ணில்
புதையும் வரையில்
எதுவும் இல்லை நம்மிடம் படைத்தவன் முன்னால்
-Veena
உலகிற்கு கோமாளி
தன்னை யார் என்று அவனுக்கு
மட்டுமே தெரியும்,
ஒன்றின் நிஜம் மற்றொன்று
அறியா,
முகமறியா முகவரியற்ற உலகில்
எதுவும் தேவையில்லை ,
அடையாளம் இரண்டு எது
வேண்டுமோ பொட்டு கொள்ளலாம்,
எது பொருந்தும் அறுசிகிச்சை
அறையில்... கண்கள் சிதைந்த
பின்!
- Vidhya

No comments:
Post a Comment