ஏந்தும் கரங்கள் தன்
பசிக்காக மட்டுமல்ல
அடுத்தவரின் பிணி
போக்க கூட இருக்கலாம்.
பிணி என்பது நோய்
என்ற பொருள் அன்றி
அடுத்தவரின் வயிற்றுப்பசி போக்க கூட இருக்கலாம் தானே?
ஏதும் கிடைக்கவில்லை என்ற
ஏக்கத்தில் கேட்கும் யாசகம்
ஏந்துபவருக்கு மட்டுமல்ல
கொடுப்பவருக்கும் இழிவே!
எல்லாம் உள்ள நாட்டில்
ஏற்றத்தாழ்வு என்பது சரியோ?
சமநிலை என்பது
என்று தான் உருவாகும்?
இது மனிதனிடத்து மனதில்
தோன்றும் சுயநல
உணர்வே அன்றி
வேறு காரணம் இல்லை.
சிலவற்றை காரணம் காட்டி
பலவற்றை இழக்கிறோம்
அன்பும் மனிதநேயமும் கொள்ளும் இடத்தில்
ஏந்துதல் இருக்காது
கொடுப்பவர் கை மேலும்
பெறுபவர் கை தாழ்ந்தும் இருப்பதாலேயே
சொல்ல முடியாத ஓர் உணர்வு
சொல்லும் தன் நிலை
இழிவு என
பணத்தாலும் செல்வத்தாலும்
மேன்மை நிலை அடைவதை
விட மனத்தால் ஒன்றிணைந்து
கரம் கோர்ப்பீர் இந்நிலை
மாற வேண்டி
கரம் கோர்க்கையில்
பிரிந்திருக்கும் விரல்கள் இணைவது போலே
எவரையும் அழகாய்
மனத்தால் இணைப்போம்
- Veena Shankar
கொடுத்து கொடுத்து தேய்ந்த
கைகள் இன்று ஏந்த..
பசிக்காக மட்டும் அல்ல பாசத்திற்கு,
அரவணைப்பிற்காக, நேரத்திற்கு..
ஏந்தும் எவரும்
நினைத்திருக்கமாட்டார்கள்
கொடுக்கும் போது இந்நிலை
வருமென்று..
- Vidhya

No comments:
Post a Comment