நடராஜரின் பிம்பமா
ஆடுவதில்?
நீ ஆட்டம் கொண்டால்
பூமியும் பிளவு கொள்ளுமே
வாழ்வில் மேடு பள்ளம்
உண்டென கொண்டால்
மட்டுமே எதுவும் புலப்படும்
இறையின் பார்வைக்காக ஏங்கும் கண்க
நீரில் உன் பிம்பமா?
நீரலையின் ஊடே
நினைவலைகள்
கண்ட காட்சியின்
நினைவுகள்
தண்ணீரில் கண்ணாடியாய்
கண்ணாடியில் உன் பிம்பமா?
அழிக்க முடியாது
உன் நிஜம் நிற்கையில்
அசைந்தால் அசையும்
விரித்தால் விரியும்
எதிரணியின் அமைப்பே தன் கோலம்
கலைஞனிட த்தில் உன் பிம்பமா?
படைத்தவன் தூரிகையால்
பல நடன அமைப்புகள்
மேலும் கீழும்
ஓர் காட்சியே!
திரும்பி திரும்பப் பார்க்க வைக்குதே!
யார் கையில் எது
என்பது சிறப்பல்ல
எவர் கையில் எது சிறப்பு கொடுக்கும் என்பதே அறிவு!
-Veena
மனிதன் கையில் மரம் கிடைத்தால்
சித்திரம்,அது சொல்லும் மந்திரமே
தந்திரம் தான்,
பட்டதும் தழைக்கும், திகைக்க
செய்யும்,அடி நுனி தெரியா
ரகசியம்!
- Vidhya

No comments:
Post a Comment