நாவின் வலியை எவர் அறிவார்?
மனது ஆறுதல் சொல்லும் அடங்கி நிற்க
நாவின் வலிமையையும் யார் அறிவார்?
மனதின் வலி மட்டுமே சொல்லும் அடங்கி நிற்க
சூழ்நிலை அறியாது
விரியும் வார்த்தைகளும்
அடுத்தவருக்கு வலியை மட்டுமே கொடுக்கும்
உன் காயத்திற்கு
அடுத்தவரை இலக்காக்காதே!
- Veena
இதயத்தை ரணப்படுத்தும்
வார்த்தையின் பிறப்பிடம் நான்
என்றும் ,பல பழி பெயரும் உண்டு
எனக்கு,நரம்பில்லாத நாக்கிற்கு
மூளை மட்டும் உண்டா எது நல்லது,
கெட்டது என்று பிரித்தறிய..
யோசிக்க தெரிந்த உங்களிடம்
இருக்கும் என் நண்பனை
கேளுங்க !
- Vidhya

No comments:
Post a Comment