நாவில் நீர் சுரக்கும்
சுவை ஊட்டும் பதார்த்தங்கள்
தட்டில் நிறைய
கண்டதும் நிறைவு கொண்டது
என் மனம்
அள்ளி அள்ளி சுவைக்க
ஆசை தான் - அருமருந்து
கொஞ்சம் கூட எடுத்தால் போதுமே!
வில்லைகள் தான்
அருமருந்து இங்கே
உயிரும் அதன் வழியே உயிர் பெறுகிறது
- Veena
நா சுவைக்கும் முன்னே
கண்கள் துவைக்க
உமிழ்நீர் நாவில் சுரக்க
அமிலம் வயிற்றில் சுரக்குதே
வண்ண கலவை கண்ணுக்கு
விருந்தாக, தட்டில் காட்சியாக ,
உண்டபின் சொர்க்கத்திற்கு
இழுக்குமே ..
உழைப்பு,நல்ல உணவு ,உறக்கம்
அதுவே சொர்க்கம்!
- Vidhya

No comments:
Post a Comment