Sunday, December 20, 2020

சிந்தனைக்குரிய பகுதி "முகமூடி" by Kiruthika

 


*முகமூடி *


சில நேரங்களில்...


*சில உறவுகள் உதிர்த்த

வார்த்தைகளை...

ஜீரணிக்கவோ மறக்கவோ-

முடியாதபோது..!!..

*இலவசம் தானே என..

வாய்க்கு வந்த விமர்சனங்கள்..

அழையா விருந்தாளியாய் 

நம்முள் நுழையும்போது...!!..

*கேட்காமலே நம்மை 

தராசில் நிறுத்தி-

கீழே தள்ளும்போது...!!...

கோபம்.. மனஉளைச்சல்..

எரிச்சல்.. என எந்த -

உணர்ச்சிகளையும்..

வெளிக் கொட்டாமல்...

மண்ணுக்குள் விழும்-

மழைத் துளிப்போல்..

குளியலில் கரையும்

கண்ணீர் துளியாய்..

மன பாரம்- இறக்கி வைத்து விட்டு !!..

மௌனம் எனும் * முகமூடி* அணிந்து ..

புன்னகை எனும் பூநகை

அணிந்தால் தான்..

சில உறவுகளில்-

விரிசல் விழாது...

வாழ்க்கை யதார்த்தமாய்..

பயணிக்க எத்தனிக்கிறது...!!...

சாந்தியோடு...!!!...



3 comments:

  1. அருமையான முகமூடி👌ஆழமான, அழகான மேற்கோள்கள்👏👏

    ReplyDelete
  2. உண்மையான வார்த்தைகள் கிருத்திகா, மௌனமே பல நேரங்களில் நம் காவல்....

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...