*உள்ளுணர்வு*
கருவாகி.....
உருவாகி....
ஈர்ஐந்து மாதங்கள் கருவறையில் உளன்றுகொண்டிருந்த நான்.....
இன்னும் சிலநொடிகளில் இப்புவியில் பிரசவிக்கப்போகிறேன்......
ஆயிரமாயிரம் கனவுகளை சுமந்து வெளியே வந்த என்னை வாரி அரவணைத்த என் தாயின் கண்களில் கண்ணீர் துளிகள்...... இதுவும் பொட்டப்புள்ளையா? என்ற
சுற்றத்தாரின் வசவை சொற்களால்...... தாயின் கண்ணீர் துளிகளை துடைக்கவும் முடியாமல்.....
வசுவுசொற்களுக்கு பதிலடி கொடுக்கவும் முடியாமல்......
என்னுடைய உள்ளுணர்வுகளுக்கு உருகொடுக்கமுடியாமல்.....
என்னை நானே வெறுக்க ஆரம்பித்த சனம்.....
வாஞ்சையயோடு உச்சி முகர்ந்த என் தந்தையின் ஸ்பரிசம் ஏனோ எனக்குள் ஒரு புது தெம்பினை கொடுத்தது.......
இப்புவியில் உதித்த என் பெண்நிலவே!
என் தேவதையே!
நீ எதற்காகவும் கலங்காதே.....
உன்னுள் எத்தனை உள்ளுணர்வுகள் உன்னில் அடங்கியிருக்கின்றன என்பதை அறியாமல்
உன்னை நீ தாழ்த்திக்கொள்ளாத கண்ணே!
நாளை நீ யாராக போகிறாய் என நீ முடிவெடு.....
மானுட பிறவி எடுத்தாலும்..... ராணியாக வாழ்ந்தாலும்....
இவை எல்லாவற்றிற்க்கும் அப்பாற்பட்ட கண்ணனின் அன்பினால்.... அவனுள்ளே ஐக்கியமாகி..... பக்தியினை உணர்த்திய.....
மீரா போல.....
ஈர்நூறாண்டுகளுக்கு முன்னே...
சூழ்ச்சியால் மாண்டு போன தன் பதியிற்க்கு சிதைமூட்டி.....
கைம்பெண்ணால் என்ன செய்ய முடியும் எனும் பேச்சுக்கு வாய்ப்பு தராமல்
பெணிணியத்தை வளர்த்த வீர மங்கை வேலுநாச்சியார் போல.....
ஒரு ஒரு நெல்மணிகளிலும் ஒளிந்திருக்கும் விவசாயின் வியர்வை துளிகள் அறிந்ததால்தான்...வள்ளுவர் எடுத்து வைத்த ஊசிக்கும், கொடடாங்குச்சிக்கும் வாய்ப்பு தராத.....
வாசுகி அம்மாள் போல.....
இரத்த பந்தத்தையே மறந்து போன உலகில்..... சீல்வடியும் ஜீவன்களையும், கருவில் உதித்ததற்க்கு காரணம் தேடும் ஜீவன்களையும் கருணை கொலை செய்ய வாய்ப்பு தராமல் ....
பல கருணை இல்லங்களை உருவாக்கிய
அன்னை தெரசா போல.....
நாளை இவர்களைப் போல நீ யாராக போகிறாய் என நீ முடிவெடுக்கும் சக்தி உனக்குள் கொட்டிக்கடக்கின்றன
இப்பிரபஞ்சத்தினை படைத்த இறைவனால்..... இன்னோர் உயிரினை படைக்கப் போகும் இறைவி நீ......
என் பெண் தேவதையே!
உனக்குள் இருக்கும் உன் உள்ளுணர்வோடு பேசு.....
நீ யார் என்பதை நீ அறிந்து கொள்வாய்...
இவ்வுலகையும் அறியசெய்வாய்!


படித்தவுடனே உள்ளிருந்து அன்பு,வீரம்,பக்தி,உற்சாகம் பீறிட்டது, அருமை👏👏👏
ReplyDeleteThanku da💜
ReplyDelete