Monday, February 22, 2021

புகைப்படம் பார் சிந்தனையை பதிவிடு by Kanchana

 


பரந்து விரிந்த நீல வானில்.......

பல்வேறு குழுக்களாக மேககூட்டங்கள்......தங்களுக்குள்

யார் உருவாக்கும் உருவங்கள் மிகசிறப்பானதாக அமையும் என்று போட்டி போட்டுகொண்டிருகின்றன.......

அனைவரும் தங்களின் உருவாக்கத்தினை சிறப்பாக செய்து கொண்டிருந்தன.....அதில் ஒரு குழுவினர் மட்டும் ஏனோ....எதையும் உருவாக்க முடியாமல் தனிமையில் அமர்ந்திருக்கும் சிட்டு குருவியிடம் சென்றனர்.......

மேககூட்டங்களின் வருகையின் சப்தத்தை கூட கவனிக்காமல் கவலையில் ஆழ்ந்திருந்தன

சிட்டுகுருவி......

காரணம் யாதென கேட்டனர்? மேககூட்டங்கள் .....


சாலையின் 

இருமருங்கிலும்

ஓங்கி உயர்ந்த மரங்கள்......

அம்மரங்களின் ஒரு ஒரு கிளைகளிலும்...... எங்கள் இனத்தவரின் கூடுகளும்.....


  

ஒற்றுமைக்கு உதாரணமான காக்கைகளின் கூடுகளும்.....


மரங்களில் அழகிய பொந்தினை போட்டு அதில் வாழும் மரங்கொத்தியினரும்


மனிதர்களின் மூத்தோர் என்று சொல்லப்படும் வானரத்தோழர்களும்.........



ராமபிராணின் கைகளால் மூன்று கோடுகளை வரைந்து கொண்ட 

தோழர்களான அணிலினத்தவரும்......



எத்தனை பசுமையான நினைவுகள்...... எங்கள் பறவையினத்தாருக்குள் வேற்றுமை இல்லை......

குருவியின் கூட்டிலே.....

காக்கையின் முட்டையும்.....

காக்கையின்

கூட்டினிலே  

சிட்டுக்குருவியின் முட்டையும்.......

எந்த பயமும் இல்லாமல் கர்ப்பகாலங்கள் இருந்தன........


அணில் கடித்த பழங்களின் மீதியினை வானரங்கள்

ருசித்து சாப்பிட்டனர்......


எங்கோ தொலைவில் இரைதேடி வந்த காக்கை.....

குருவிகுஞ்சுக்கும்.......

குருவி......

காக்கைகுஞ்சிற்க்கும் இரையினை பாகுபாடில்லாமல் பகிர்ந்தளித்தன..... 



இப்படி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்த நாங்கள்......

மீளாத்துயரங்களில் தள்ளப்பட்டோம் மாமனிதர்களால்..... 


மேல்நாட்டு உணவுகளின் ருசியானால்..... விவசாய நிலங்களை உழுவதை மறந்து போனான்.....


கணப்பொழுதில் தான் போகும் இடம் செல்ல வேண்டும் என வழிநெடுகிலும் உள்ள மரங்களை அழித்து மரநிழலை மறந்து போனான்.....


இருக்கும் இடத்தில் இருந்து சொந்தங்களை அழைக்க தொடங்கி.......

அதற்காக செல்போன் டவர்களை வைத்து என்இனத்தினை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து

இறுதியில் மனிதத்தினையே மறந்து போனான்...... 

மனிதன்!


மனிதத்தை மறந்து போன மனிதனால்

என்இனமே! மீளவழியில்லாமல்

மாண்டுபோய்க்கொண்டிருக்கின்றன..


மாண்டுபோன என் இனத்தில்.....

தனிஒருவனாக

நான்.....



வீசும் தென்றலுடனும்.....கீச்,கீச் எனும் குருவிகளின் கொஞ்சலுடனும்..... 

என் தாய் கட்டிய கூடு எனும் தொட்டிலில் நிம்மதியாக இருந்த என்னை.......

இருக்க இடமில்லாமல்.....

கொளுத்தும் வெயிலில்......

மின்கம்பிக்கு எப்போது இரையாவேன் எனத்தெரியாமல்....

தனிஒருவனாக நிற்கின்றேன்...... 

மாமனிதனால்?



7 comments:

  1. அழகான சிந்தனை,அருமை👏👏

    ReplyDelete
  2. Very beautiful 😍lots of words and thoughts. Thoughts in you are to be cherished. God bless you.Great platform.

    ReplyDelete
  3. Thanku Vidya,Veena,Mahesh,Sakthi🧡💜🧡

    ReplyDelete
  4. அருமையான பதிவு ...அழகான சிந்தனைகள் ஒரு சேர சிட்டு குருவியின் மூலம் -காஞ்சனா கலக்கல்

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...