Friday, February 19, 2021

சிந்தனைக்குரிய பகுதி _"காலம்" by Kanchana

 



பச்சைப்பட்டு புடவைக்கு கார்மையினால்.... திருஷ்டி பொட்டு வைப்பதுப்போல....பரந்து விரிந்த பசுமையான விவசாய நிலங்களுக்கு நடுவில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் குடிசைவீடுகள்....

அப்பசுங்குடிலில் இருந்து என் முதல் பள்ளி பயணம்..... மஜ்ரூன் கான்வென்ட் மற்றும் தும்பல் கான்வென்ட்.....


யாதும் அறியா வயதில் என் பழக்க வழக்கத்தினை தாண்டி..... பிறிதொரு மதத்தின்

அமைதியான சூழ்நிலை...... மன்னிக்கவும்,

மறக்கவும், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை கன்னத்தை காட்டும் அளவிற்கு 

அன்பினை

உணர்த்திய காலம்...... 

என் மூன்றாம் வகுப்பு வரை......


அதன்பின் என் தந்தையின் பணி நிமித்தம் காரணமாக தமிழ் மீடியம் சேரும் சூழல்......

தலைமை ஆசிரியரின் முன் என் கைகளால் காதை தொட்டவுடன்

தொடங்கியது எலிமென்டரி ஸ்கூல் பயணம்....

முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை...... அப்பாவிடம் நாலணா,எட்டணா வாங்கி கொண்டு பலகிலோ மீட்டர்களை தாண்டி..... சுற்றிலும் காகித பூச்செடிகளுக்கு நடுவில் மகாத்மா காந்தியின் உருவசிலையினை சுற்றியும் மாணவ மாணவிகளின்

நீராரும் கடலுடுத்த எனும் இறை

வணக்கத்தோடு ஆரம்பிக்கும் இனிய நாள்.....

தமிழ் வாத்தியாரிடம் வாங்கிய பிரம்படியின் வலியினை முழுதாக அனுபவிப்பதற்க்குள்.....

இடைவேளை ஆரம்பித்திடும்......

பட்டியில் இருக்கும் மந்தைஆடுகள் அவிழ்த்துவிடுவதைப்போல......

வகுப்பறைக்குள் இருந்து வெளியே ஓடிவரும் தோழிகளோடு விளையாட்டு திடலில் கீழே கொட்டிக் கிடக்கும் பஞ்சு காய்களை உடைத்து தாத்தா..தாத்தா பற பற பற என்று விளையாடி பாலநட்பினை உணர்த்திய காலம்......


வகுப்பறையில்

ஜன்னலில் இருந்து வீசும் இளந்தென்றலை

உணரும் வேளையில்

தான் செய்த சிறு தவறுகாக

முதுகின்பின்னால்

வெள்ளை காகிதத்தை ஒட்டி

மூச்சிரைக்க ஐம்பதாவது ரவுண்ட் அடிக்கும் பையன்.....

தான் செய்த பெரும் தவறுகாக

தாங்கமுடியாத வலியின் வேதனையோடு 

உப்பின்மீது மண்டியிட்டிருக்கும்

பையன்.......

செய்த தவறுக்கு கடுமையான தண்டனை விதிக்க படும் என்று பயந்து குற்றங்கள் செய்ய துணியான்........

(கடுமையான தண்டனைகள் இருந்தால் பாலியல் வன்கொடுமை செய்ய துணியான் ஆண்மகன் )

செய்யும் தவறுக்கு தண்டனை விதிக்க படும் என்று உணர்ந்த காலம்......


மாலை வீடு திரும்பும் போது வழிநெடுகும் இருக்கும் கட்டில் கடைகளில்......

மிளகாய்பொடி தூவிய

பிஞ்சு மாங்காயும்..... கலாக்காய்களும்....

ஆரஞ்சு மிட்டாய்களும்.......

பஞ்சு மிட்டாய்களும்.......

தேன் மிட்டாய்களும்......

குச்சி ஐஸும்........

நாவில் உமிழ்நீரினை சுரக்க வைக்கும்

நாலனாவிற்க்கே கைநிறைய

 வாங்கிய திண்பண்டங்களை சாப்பிட்டு முடிக்கும்போது வீடு வந்து சேர்ந்து விடும்......

எப்படா வருவேன் என்று காத்திருக்கும் நாய்குட்டிகளும், பூனை குட்டிகளும்,பசு, எருமை மாடுகளும் வெளிப்படுத்தும் அன்பு அபரிதமானது, மரிச்சியில் எருமை மாட்டின் மீது அமர்ந்து ஒருநெடு பயணம் .......

வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான,

பாகுபாடில்லா அன்பினை உணர்ந்த காலம்.......


ஏர்பூட்டிய மாடுகளை 

சுட்டெரிக்கும் வெயிலிலும் வயலினை உழுதும்.....

வியர்வை துளிகளை சிந்தி கிணறு வெட்டியும்...... 

ஒரு படி கடலையை உரிப்பதற்க்கு ஐந்து காசு வாங்கியதும்...... 

ஒரு ஒரு நெல்மணியும்.....

உழவினின் ஆயிரம் வியர்வை துளிகளில் பிரசவித்தது என்று உணர்ந்த காலம்.....


இன்று இன்னும்

யாரும் அறியா காலம்!   


கிராம வாழ்க்கை 

இப்புவியிலேயே நாம் அனுபவிக்க வேண்டிய சொர்க்கம்



5 comments:

  1. அப்ப புல்லரிக்க வைத்தது,மறக்க முடியாத காலங்கள்👌👏👏

    ReplyDelete
  2. மிக அருமையான ( தற்போது அரிதான எண்ணன்களின்) பதிவு

    ReplyDelete
  3. அருமையான படக்காட்சிகள் வித்யா ஜி

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...