Sunday, February 21, 2021

"இக்கிகய்" புத்தக விளக்கம் by Vidhya Nivash

 



அனைவருக்கும் வணக்கம்,

"இக்கிகய்" புத்தகத்திலிருந்து படித்ததில் பிடித்ததை பகிர்கிறேன். காலையில் எழுந்தவுடன் சோம்பலாக இருக்கிறது ,செய்த வேலையை செய்து செய்து வாழ்க்கையில் சுவாரசியமே இல்லாமல் இருக்கிறது .இதை அதிகமாக கேட்கிறோம் இந்நாளில் ... வாழ்க்கை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு இந்தப் புத்தகம் கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும்.





ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் வாழ்வதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்று தெளிவாக கூறுகிறது இந்த புத்தகம் .அதைப் பல கதைகள் மூலம் விளக்கி இருக்கிறார்கள் .100 வயதிற்கு மேல் வாழும் ஜப்பானியர்களிடம் உங்கள் வாழ்க்கையின் ரகசியம் என்ன என்பதை கேட்டதற்கு அதைத்தான் நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒவ்வொரு நாளையும் கொண்டாடுகிறோம் .80 வயதில் தான் நாங்கள் புதிதாக பிறக்கிறோம், 90 வயதில் வளர்கிறோம், 100 வயதில் மேலும் கற்றுக் கொண்டு இருக்கிறோம் என்று குழந்தைகள் போல அவர்கள் சொல்வதை கேட்கும் போது நமக்கும் மனதில் ஒரு உற்சாகம் தோன்றுகிறது.





எனக்கு என் உடல் நிலையில் இத்தனை குறைபாடுகள் என்னால் இனிமேல் இந்த வேலைகள் எல்லாம் செய்ய முடியாது எனக்கு வயது முதிர்ந்து விட்டது என்று இல்லாமல் ஆடி,பாடி,மகிழ்கின்றனர். இங்கே வலிக்கிறது, அங்கே வலிக்கிறது இதை நாம் இப்பொழுது முப்பது வயதிலிருந்தே கேட்க தொடங்கிவிட்டோம் .ஐந்து வயது குழந்தைகள் கூட இப்பொழுது இதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் . நவீன வாழ்க்கை நம்மை அதிக அளவில் இயற்கையிடம் இருந்து பிரித்து நன்மை அதிகம் சோர்வாகி விட்டது .



மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையில் முதல் கேள்வியே நீங்கள் ஏன் இன்னும் தற்கொலை செய்து கொள்ளவில்லை ? வாழ்க்கையை நீங்க வாழ்வதற்கு ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது.தற்கொலை முயற்சி எடுத்துக் கொண்டவர்களிடம் ஏன் இதை மேற்கொண்டீர்கள் என்றால்? அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்களை கூறுகிறார்கள் .அப்பொழுது இரண்டு கதைகள் மூலமாக அழகாக விளக்குகிறார். குழந்தை பெற்றவர்கள் அந்தக் குழந்தைகளை வளர்க்க முடியாமல் துணையை இழந்து,பாடுபட்டு வாழ்க்கை தோல்வி அடைந்துவிட்டது என்றும் ,குழந்தைகளே இல்லாதவர்கள் எங்களுக்கு குழந்தைகள் இருந்தால் எங்களுடைய வாழ்க்கை முழுமையானதாக இருக்கும் என்றும் அதிலிருந்து அதை அழகாக தெளிவு படுத்தி இருக்கிறார்கள் .


தன்னுடைய துணையை இழந்து வருந்திக் கொண்டிருக்கும் ஒருவரிடம் ,உங்களுடைய துணையில்லாமல் அவர்கள் இந்த உலகில் தனியாக வாழ முடியுமா? அதை யோசித்துப் பாருங்கள் .அப்பொழுது உங்களுக்கு புரியும் உங்களுடைய வாழ்க்கையின் அர்த்தம் என்று பல சிறு சிறு கதைகள் மூலம் விளக்கியுள்ளனர் . இங்கு, இப்பொழுது ,உங்க வாழ்க்கையில், உங்கள் மனதில் தோன்றும் மகிழ்ச்சியே நிலையானது ,உங்கள் பாதையை மாற்றாமல் தொடருங்கள்.உலகில் எதும் நிலையற்றது அதை இந்த புத்தகம் தெளிவாக கூறுகிறது.





ஒவ்வொருவருடைய பிறப்பிற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது .ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பமான காரியம் ஒன்று இருக்கும். அதை உங்கள் மனதில் ஆராயுங்கள், தேடிக் கண்டுபிடியுங்கள், அதிகமாக உங்களை அதில் செலுத்துங்கள் .எப்படி தேர்ந்தெடுப்பது என்று மிக எளிய முறையில் ,எந்த செயலில் இயற்கையுடன் இணைந்து உணவருந்தாமல்,காலம் கடந்து மூழ்க்கி இருக்கிறோ அதுவே உங்கள் "இக்கிகய்".கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் அதையே எண்ணி வருத்தப்பட தேவையில்லை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல பெற்றோராக இருப்பதும் , அண்டை வீட்டாருக்கு அன்பானவராக இருப்பதுமே, அர்த்தமுள்ள, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் வாழ்க்கை .





வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு அவர்கள் பல வழிமுறைகளை கூறியுள்ளனர். அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .உங்களுக்குப் பிடித்த காரியத்தை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அழகாக சொல்லியிருக்கிறார்கள் எளிமையான தாகவும் இருக்கக்கூடாது, மிக கடினமாக இருக்கக் கூடாது .எளிமையானதாக இருந்தால் அலுப்பு ஏற்படும், அதே மிக கடினமாக இருந்தால் உங்களுக்கு பதட்டம் ஏற்பட்டு விடும். உங்களுக்கு பிடித்த ,உங்களால் முடிந்த, சிறது கடினமான ,சவாலான ஒரு செயலை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.அதில் திளைத்திருங்கள், அதற்கு நாம் அன்றாடம்

கடைப்பிடிக்கும் சடங்குகளும்,ஆன்மீகமும் துணைபுரியும் என்று இந்த புத்தகத்தில் அழகாக விளங்கி இருக்கிறார்கள் .


அந்த அறிவுரைகள் என்னவென்றால்

1.80 சதவீதம் மட்டுமே உணவருந்துங்கள்

,உணவில் அதிகளவில் உப்பு இல்லாமல்,இயற்கையில் விளைந்த பொருட்களாக இருக்க வேண்டும்.

2. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருங்கள்.

3.ஒவ்வொரு நாளும் நம்முடைய மனதிற்கு நெருக்கமானவர்களுடன் சந்தோஷமாக கொண்டாட வேண்டும்.

4. நம்மை எது பலவீனப்படுத்துகிறதோ அதை விட்டு விலகி இருங்கள், அனைத்திற்கும் நன்றி உணர்வோடு இருங்கள்.

5.இறந்தகாலம்,எதிர்காலத்தையும் எண்ணாமல் நிகழ்காலத்தில், இந்த ஒருநாள் மட்டுமே உங்களுக்கு கொடுக்கப்பட்டது. அதை நீங்கள் மிகவும் சந்தோஷமாக செலவழியுங்கள்.

6.உங்களுடைய உடல் நிலையில் அக்கறை செலுத்துங்கள் தினமும் காலை சிறிது நேரம் உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள்.

7.எந்த ஒரு காரியத்திலும் அவசரப்படாதீர்கள் ,நிதானமாக வேலை செய்யுங்கள்.

8. உங்களை சுற்றிலும் எப்பொழுதும் நல்ல நண்பர்களை வைத்துக் கொள்ளுங்கள்.

9. எதை எண்ணியும் கவலைப்படாதீர்கள்.

10. இயற்கையோடு இணைந்த உங்களுக்கு விருப்பமான செயல்களில் நிலைத்திருங்கள், தொடருங்கள்...





உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு உங்களை சுற்றி இருக்கும் அன்பானவர்கள் அதற்கு ஒரு முக்கிய காரணம்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...