வண்ண வண்ண வானவிலே கண்சிமிட்டும்
நேரத்திலேயே வட்டமிட்டு போவதென்ன!
சொர்க்கம் என்று சொல்வோர் உண்டு நீ தான்
அதன் வாயில் கதவோ!
யார் வந்து வண்ணம் தீட்டினார்
சொல்லி செல்லு நானும் தீட்ட!
எட்டி எட்டி உன்னை தொட எந்த ஏணி
கொண்டுவர?
வேண்டாம்! வேண்டாம்! ஓடிடாதே...
அண்ணாந்து பார்ப்பதே எனக்கு போதும்
வந்த சேதி சொல்லி போவேன்!
வேண்டாம் !வேண்டாம்! நில்லு தாயே..
ஒரே ஒரு புகைப்படம் எடுப்பேன்...
நன்றி! நன்றி! வாய்ப்பு தந்ததற்கு
மீண்டும் மீண்டும் அந்த வாய்ப்பை தாவேன்!!!
( 2014 ல் ஜகார்த்தாவில் எடுத்தது)


அருமை. அள்ளி அள்ளி தந்த வானம் வானவில்
ReplyDeleteNice vidhya.
ReplyDeleteThank you Sakthi
Deleteஇது நல்ல பாட்டு போல் இருக்கு.... சூப்பர்
ReplyDeleteஉண்மை,மிக்க நன்றி😊
DeleteAha,super scene ry,nice
ReplyDeleteThank you Amma
Delete